
செய்திகள் மலேசியா
சிலாங்கூர் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் 8.3% குறைந்துள்ளது
பெட்டாலிங் ஜெயா:
சிலாங்கூரில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8.3% விழுக்காடு குறைந்துள்ளதாக அம்மாநில பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக் குழு தலைவர் Jamaliah Jamaluddin தெரிவித்தார்.
கடந்த மே 18-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை சிலாங்கூரில் 519 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இரு மரணச் சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டன.
இதற்கு முந்தை வாரம் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 566 ஆக பதிவு செய்யப்பட்டிருந்தது.
பெட்டாலிங் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அங்கு மட்டும் 178 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதற்கு அடுத்த நிலையில் கிள்ளானில் 119 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டிங்கிக் காய்ச்சல் சம்பவங்கள் குறைந்தாலும் பொது மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு Jamaliah Jamaluddin வலியுறுத்தினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 30, 2025, 9:34 pm
வெப்பமான வானிலை செப்டம்பர் மாதம் வரை தொடரும்: மெட் மலேசியா
May 30, 2025, 5:32 pm
சமூகத்தை மாற்ற நிறைய வழிகள் உள்ளன: ரபிஸி ரம்லி
May 30, 2025, 5:30 pm
சபா ஊழல் விசாரணைகளில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: பிரதமர்
May 30, 2025, 10:43 am