நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விதிமுறைகளுக்கு உட்படாத காரணத்தால் 1,073 விண்ணப்பங்களை மித்ரா நிராகரித்துள்ளது: பிரபாகரன்

புத்ராஜெயா:

விதிமுறைகளுக்கு உட்படாத காரணத்தால் கிட்டத்தட்ட 1,073 விண்ணப்பங்களை மித்ரா நிராகரித்துள்ளது.

மித்ரா சிறப்பு நடவடிக்கை குழுவின் தலைவர் பிரபாகரன் இதனை கூறினார்.

மித்ராவுன் இணைந்து இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள அரசு சாரா இயக்கங்கள், நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் முதல் ஜனவரி  வரை இதற்கான விண்ணப்பகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த ஒரு மாதக் காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட  1,332 விண்ணப்பங்களை மித்ரா பெற்றது.

இதில்  1,073 விண்ணப்பங்களை  மித்ரா நிராகரித்து விட்டது.

விண்ணப்பம் முழுமை பெறவில்லை  என்ற காரணத்தால் இந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முறையான கணக்கறிக்கைகள் இல்லை. 

நேர்முக தேர்வில் தோல்வி கண்டது உட்பட பல காரணங்களால் இந்த விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அதே வேளையில் 300 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக 45 விண்ணப்பங்கள் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டு மானியம் வழங்கவும் மித்ரா ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமரின் ஒப்புதல் கிடைத்தவுடன் மானியம் அந்த இயக்கங்களுக்கு வழங்கப்படும் என்று பிரபாகரன் கூறினார்.

இந்திய ஒரு சமுதாயத்தின் உருமாற்றத்தை இலக்காக கொண்டு மித்ரா செயல்பட்டு வருகிறது.

அதற்கான திட்டங்களை கொண்டு வரும் அரசு சாரா இயக்கங்கள், நிறுவனங்களுடன் மித்ரா இணைந்து பயணிக்கும் என்று பிரபாகரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset