
செய்திகள் மலேசியா
பதவியை ராஜினாமா செய்வது ரபிசி, நிக் நஸ்மியின் உரிமை; ஏற்றுக் கொள்வது பிரதமரின் அதிகாரத்திற்கு உட்பட்டது: முகமத் சானி
காஜாங்:
பதவியை ராஜினாமா செய்வது ரபிசி, நிக் நஸ்மியின் தனிப்பட்ட உரிமை. ஆனால் அதை ஏற்றுக் கொள்வது பிரதமரின் அதிகாரத்திற்கு உட்பட்டது.
உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமத் சானி ஹம்சான் கூறினார்.
கடந்த வாரம் நடைபெற்ற கெஅடினான் கட்சித் தேர்தலில் ரபிசி ரம்லி, நிக் நஸ்மி ஆகியோர் தோல்வி கண்டனர்.
இதனால் அவர்கள் தங்களின் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதற்கான கடிதத்தையும் கொடுத்து விட்டனர்.
கொடுத்த வாக்குறுதியையும் கொள்கையும் காப்பாற்றும் தலைவர்களாக நான் அவர்களை பார்க்கிறேன்.
மேலும் ராஜினாமா கடிதத்தை கொடுப்பது அவர்களின் தனிப்பட்ட உரிமையாகும்.
ஆனால் அதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும்.
அதே வேளையில் புதிய அமைச்சர்களை நியமனம் செய்வதும் அவரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும்.
ஆகயே இது குறித்த ஆரூடங்களை அனைவரும் தவிர்த்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக பிரதமருக்கான ஆதரவை அவர்கள் மீட்டுக் கொள்ளப் போகிறார்கள் என்ற வதந்திகளையும் மக்கள் நம்பக் கூடாது.
காஜாங்கில் நடைபெற்ற ஜிவி ரைட் இ-ஹைலிங் நிறுவனத்தின் ஓட்டுநர்களுக்கான பரிசளிப்பு விழாவிற்கு பின் அவர் இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 30, 2025, 5:32 pm
சமூகத்தை மாற்ற நிறைய வழிகள் உள்ளன: ரபிஸி ரம்லி
May 30, 2025, 5:30 pm
சபா ஊழல் விசாரணைகளில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: பிரதமர்
May 30, 2025, 10:43 am