
செய்திகள் மலேசியா
எனது பெயரைப் பயன்படுத்தி அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள்: டத்தோஸ்ரீ ரமணன் எச்சரிக்கை
கோலாலம்பூர்:
எனது பெயரைப் பயன்படுத்தி அவதூறு பரப்புவதை பொறுப்பற்ற தரப்பினர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கெஅடிலான் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
அரசியல் ஆதாயத்திற்காக பொறுப்பற்ற தரப்பினர் இதுபோன்ற கீழ் தரமான நடவடிக்கைகளை செய்துள்ளனர்.
அவர்களின் செயல் கண்டிக்கத்தக்கது.
மேலும் எந்தவொரு அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையும் தனது அலுவலகம் மூலமாகவோ அல்லது தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளம் மூலமாகவோ மட்டுமே வெளியிடப்படும்.
அதனால் அவதூறு பரப்ப தீவிரமாக இருக்கும் பொறுப்பற்ற தரப்பினர் செயல்களில் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கடந்த வாரம் கெஅடிலன் தேசிய மாநாட்டில எனது இறுதி உரையின் போது பரிந்துரைக்கப்பட்டபடி,
அவதூறுகளை பரவுவது மிகவும் பரவலாகி வருகிறது.
கட்சி உறுப்பினர்கள் கடுமையான நடவடிக்கை மூலம் அதை எதிர்த்துப் போராட வேண்டும் என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 30, 2025, 9:34 pm
வெப்பமான வானிலை செப்டம்பர் மாதம் வரை தொடரும்: மெட் மலேசியா
May 30, 2025, 5:32 pm
சமூகத்தை மாற்ற நிறைய வழிகள் உள்ளன: ரபிஸி ரம்லி
May 30, 2025, 5:30 pm
சபா ஊழல் விசாரணைகளில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: பிரதமர்
May 30, 2025, 10:43 am