
செய்திகள் மலேசியா
நாட்டின் சுற்றுலாத் தளங்களை மேலும் பிரபலப்படுத்த சினிமா துறை முக்கிய பங்கை ஆற்றுகிறது: டத்தோ அமாலுடின்
ஈப்போ:
நாட்டின் சுற்றுலாத் தளங்களை மேலும் பிரபலப்படுத்த சினிமா துறை முக்கிய பங்கை ஆற்றுகிறது.
பேரா மாநில கால்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ அமாலுடின் இதனை கூறினார்.
பேராவில் அதிகமாக படமாக்கப்பட்ட விஜய் சேதுபதி நடித்த ஏஸ் தமிழ்ப்படம் தர்போது திரையரங்குகளில் வெளியீடு கண்டது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சி இங்குள்ள எல்.எப்.எஸ். திரையரங்கில் திரையிடப்பட்டது.
திரையரங்குகளில் வெளியீடு கண்ட இபட்டத்தை காண பெரும் திரளான ரசிகர்கள் குவிந்தனர்.
ஈப்போ அருள் மிகு கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி பூஜை போட்டு இத்திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டது.
பேராவின் ஈப்போ, தைப்பிங் உட்பட சில காட்சிகள் கோலாலம்பூரிலும் பட மாக்கப்பட்டது.
ஆறுமுககுமார் இயக்கியுள்ள இப்படத்தில் இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படம் விஜய் சேதுபதி 51ஆவது திரைப்பட்படமாகும்.
காதல் , குற்றம், நகைச்சுவை அடங்கிய கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.
யோகி பாபு, பி.எஸ். அவினாஷ் மற்றும் பப்லு பிரிதிவீராஜ் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்
மலேசியாவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் மலேசிய நடிகர்களான தினேஸ் குமார், அல்வீன் மார்டீன், பிலிசிலியா , ஜோசோப் சுப்பையா, கார்த்திக் ஜெய் உட்பட பலர் நடித்துள்ளனர் தங்களின் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
நமது நாட்டில் உள்ள பிரபலமாக சுற்றுலா இடங்களை வெளிப்படுத்த சினிமா துறை முக்கிய பங்காற்றுகிறது என்று இந்த நிகழ்வில் சிறப்பு வருகை புரிந்த டத்தோ அமாலுடின் தமது உரையில் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 30, 2025, 9:34 pm
வெப்பமான வானிலை செப்டம்பர் மாதம் வரை தொடரும்: மெட் மலேசியா
May 30, 2025, 5:32 pm
சமூகத்தை மாற்ற நிறைய வழிகள் உள்ளன: ரபிஸி ரம்லி
May 30, 2025, 5:30 pm
சபா ஊழல் விசாரணைகளில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: பிரதமர்
May 30, 2025, 10:43 am