
செய்திகள் மலேசியா
தாதியர்களுக்கு வாரத்திற்கு 45 மணி நேரம் வேலை: ஆகஸ்ட் 1ஆம் தேதி அமலுக்கு வருகிறது
புத்ராஜெயா:
தாதியர்களுக்கு வாரத்திற்கு 45 மணி நேரம் வேலை என்ற புதிய நடைமுறை வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி அமலுக்கு வரும் என பொது சேவைத் துறை இதனை கூறியது.
வார்டுகளில் உள்ள தாதியர்களுக்கு வாரத்திற்கு 45 மணி நேர வேலை என்ற புதிய நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.
இதற்காக சுகாதார அமைச்சுக்கு மேலும் இரண்டு மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இந்த நடைமுறையை செயல்படுத்துவதற்கான புதிய தேதி ஆகஸ்ட் 1 ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் பொதுச் செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இடைக்காலக் காலம் முடிந்த பிறகு, ஷிப்ட் வேலை நேரங்கள் செயல்படுத்தப்படுவதை சுகாதார அமைச்சு உறுதி செய்ய வேண்டும்.
சுகாதார அமைச்சு அவ்வப்போது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது என்று பொது சேவைத் துறை கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 30, 2025, 9:34 pm
வெப்பமான வானிலை செப்டம்பர் மாதம் வரை தொடரும்: மெட் மலேசியா
May 30, 2025, 5:32 pm
சமூகத்தை மாற்ற நிறைய வழிகள் உள்ளன: ரபிஸி ரம்லி
May 30, 2025, 5:30 pm
சபா ஊழல் விசாரணைகளில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: பிரதமர்
May 30, 2025, 10:43 am