
செய்திகள் மலேசியா
அன்வாருக்கான ஆதரவை மீட்டுக் கொள்ளும் செய்திகளை சாங் லி காங், டான் கெர் ஹெங் மறுத்தனர்
கோலாலம்பூர்:
கெஅடிலான் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கான தங்களின் ஆதரவை மீட்டுக் கொள்வதாக கூறப்படும் செய்தியை கெஅடிலானின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுத்துள்ளனர்.
பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிஸி ராம்லி, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது ஆகியோர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த புதிய செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.
இந்நிலையில் இந்த செய்தி முட்டாள்தனமானது என்று அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சரும் கெஅடிலான் உதவித் தலைவருமான சாங் லி காங் கூறினார்.
ஜனநாயகத்தின் கண்ணியத்தையும் உணர்வையும் பராமரிக்க ரபிஸியும் நிக் நஸ்மியும் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தனர்.
எனவே மீதமுள்ளவர்கள் குழப்பமான நீரில் மூழ்கத் தேவையில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 30, 2025, 5:32 pm
சமூகத்தை மாற்ற நிறைய வழிகள் உள்ளன: ரபிஸி ரம்லி
May 30, 2025, 5:30 pm
சபா ஊழல் விசாரணைகளில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: பிரதமர்
May 30, 2025, 10:43 am