
செய்திகள் மலேசியா
சனிக்கிழமை முதல் மேம்பாட்டுப் பணிகளுக்காக கேடிஎம், ஈடிஎஸ் ரயில் சேவைகளின் கால அட்டவணைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன
கோலாலம்பூர்:
வரும் சனிக்கிழமை முதல் மேம்பாட்டுப் பணிகளுக்காக கேடிஎம், ஈடிஎஸ் (KTM Komuter, ETS) ரயில் சேவைகளின் கால அட்டவணைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
கேடிஎம்பி எனப்படும் தானா மெலாயு ரயில் நிறுவனம் இதனை கூறியது.
கெப்போங் நிலையம், சாலாக் செலாத்தான் நிலையம் இடையேயான பாதையில் சமிக்ஞை அமைப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த காலகட்டத்தில் கிள்ளான் பள்ளத்தாக்கில் கேடிஎம் கம்யூட்டர் சேவைகள், மின்சார ரயில் சேவைகள் ஈடிஎல்ஸ் ஆகியவற்றுக்கான கால அட்டவணைகளில் மாற்றங்கள் இருக்கும்.
இது வரும் சனிக்கிழமை முதல் ஜூன் 2 வரை அமலில் இருக்கும்.
பூலாவ் செபாங்-பத்துமலை-புலாவ் செபாங், தஞ்சங் மாலிம்- கேஎல் சென்ட்ரல்-தஞ்சங் மாலிம் வழித்தடங்களில் கேடிஎம் கம்யூட்டர் சேவைகளும்,
அதே போல் ஈடிஎஸ் சேவைகளும் அவற்றின் அசல் அட்டவணையிலிருந்து 50 நிமிடங்கள் வரை தாமதமாகும் என்று கேடிஎம்பி கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 30, 2025, 10:43 am
லோரியை மோதிய 5ஆம் படிவ மாணவர் மரணம்
May 30, 2025, 10:40 am
நான் பிஸியாக இருக்கிறேன்: அமைச்சரவையில் மீண்டும் இணையும் ஊகங்களை கைரி மறுத்தார்
May 29, 2025, 4:36 pm
சிலாங்கூர் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் 8.3% குறைந்துள்ளது
May 29, 2025, 4:35 pm