நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அவசரக் கால மருந்து விநியோகத்தை உறுதி செய்ய ஆசியான் நடவடிக்கை

கோலாலம்பூர்:

அவசரக் காலக்கட்டத்தில் மருந்து விநியோகப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தும்
கடப்பாட்டை ஆசியான் உறுப்பு நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆசியான் மருந்து பாதுகாப்பு மற்றும் சுயசார்பு, ஏடிஎஸ்எஸ்ஆர் மற்றும் ஏடிஎஸ்எஸ்ஆர் பிராந்திய ஒத்துழைப்பு செயல் திட்டம் மூலம் இந்நடவடிக்கை உறுதி செய்யப்படும். 

இந்தப் பிரகடனம் 46-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது ஏற்றுக் கொள்ளப்பட்டது. தயாரிப்பு, பதிவு, கொள்முதல், விநியோகம் தொடங்கி மருந்துகளின் ஆயுள் சுழற்சியை வலுப்படுத்துவதில் தங்களுக்கு உள்ள கடப்பாட்டையும் அந்நாடுகள் புலப்படுத்தின.

தடையற்ற விநியோகச் சங்கிலி வாயிலாகப் பாதுகாப்பான, தரமான மருந்துகள் எப்போதும் கிடைப்பதை உறுதி செய்வதை இந்த பிரகடனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அனைத்து தளங்களிலும் வெற்றிகரமான ஒத்துழைப்பை உறுதி செய்வதற்காக முன்னுரிமையுடன் தொடர்புடைய மேம்பட்டத் தகவல் தொடர்பு மற்றும் தரவு பகிர்வு முறையின் கீழ் இதனை அடைய முடியும் என ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அதன் தொடர்புடைய மாநாடுகளின் இறுதியில் வெளியிட்டபட்ட பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசியான் உறுப்பு நாடுகள் மத்தியில் ஒழுங்கு முறை வழிகள் சீரமைக்கபடுவதை, குறிப்பாக அவசர நிலையின் போது மருந்து சார்ந்த பொருள்களை கொள்முதல் செய்வது மற்றும் விநியோகம் செய்வதில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த பிரகடனம் வகை செய்கிறது.

இந்தப் பிரகடனத்தின் வாயிலாக ஆசியான் உறுப்பு நாடுகள் மத்தியில் தடையற்ற மற்றும் விரைவான மருந்துப் பொருள்களின் விநியோகத்தை உறுதி செய்ய இயலும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset