நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எதிர்கால வெற்றியின் அளவுகோலாகச் செயற்கை நுண்ணறிவு அமையும்:  தெங்கு ஜஃப்ருல் 

கோலாலம்பூர்: 

தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் நாடுகளின் எதிர்கால எதிர்கால வெற்றியின் அளவுகோலாகச் செயற்கை நுண்ணறிவு அமையும் என்று முதலீடு, வர்த்த்கம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் கூறினார்.

அவர்கள் செயற்கை நுண்ணறிவை எவ்வளவு திறம்பட பயன்படுத்துகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் வெற்றியை அளவிட முடியும் என்றார் அவர்.

செயற்கை நுண்ணறிவு இனி ஒரு தொழில்நுட்ப கருவி மட்டுமல்ல.

மாறாக,  அது இப்போது பொருளாதார போட்டித் திறன், தேசிய உறுதித்தன்மை மற்றும் பன்னாட்டு அரசியல் செல்வாக்குக்குத் தேவைப்படும் முக்கிய இயந்திர சக்தியாக மாறியுள்ளது.

பல வகைகளில், செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே நாம் எப்படி வேலை செய்கிறோம், தகவல்களைத் தேடுகிறோம் அல்லது வழங்குகிறோம் என்பதை மாற்றியமைத்துவிட்டது.

அதேசமயம், நம் வாழ்கை, பரஸ்பர உறவுகள் மற்றும் பொழுதுபோக்கு முறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தப் பெரும் மாற்றத்திற்குப் பின்னால் உள்ள சவால்கள் மற்றும் அபாயங்களை எச்சரிக்கும் குரல்கள் எப்போதும் ஒலிப்பதாகவும் தெங்கு ஜஃப்ருல் சுட்டிக் காட்டினார்.

இன்று நடைபெற்ற The Intelligence Grid: Building Bridges Through Sovereign AI Collaboration என்ற தலைப்பிலான உரையாடல் அமர்வில் தனது தொடக்க குறிப்பில் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset