நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புருனை சுல்தானின் உடல்நிலை சீராகவுள்ளது: பிரதமர் அன்வார் 

கோலாலம்பூர்: 

சோர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புருனை சுல்தான் ஹசனல் போல்கியாவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

78 வயதான புருனை சுல்தான் கோலாலம்பூரில் உள்ள தேசிய இருதயக் கழகத்தில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் சில நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாம் அவரைச் சென்று பார்த்து நலம் விசாரித்ததாகவும் தற்போது அவர் ஓய்வில் இருப்பதாகவும் புத்ராஜெயா மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஆசியான் தணிக்கையாளர்கள் மாநாடு 2025 இன் முடிவில் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். 

புருனை அரச குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset