
செய்திகள் ASEAN Malaysia 2025
ஆசியான், ஜிசிசி வர்த்தக வாய்ப்பு அடுத்த ஆண்டு 30 சதவீதம் அதிகரிக்கும்: குவைத் பட்டத்து இளவரசர்
கோலாலம்பூர்:
ஆசியான், ஜிசிசி வர்த்தக வாய்ப்பு அடுத்த ஆண்டு 30 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குவைத்தின் பட்டத்து இளவரசரும், ஜிசிசி உச்சமன்ற குழுவின் தலைவருமான ஷேக் சபா அல் காலித் அல் சபா இதனை கூறினார்.
வளைகுடா ஒத்துழைப்பு, ஆடியான் இடையேயான வர்த்தக திறன் 2026 ஆம் ஆண்டுக்குள் 30 சதவீதம் உயரும்.
இது 757 பில்லியன் ரிங்கிட் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 550.2 பில்லியன் ரிங்கிட்டாக பதிவானது,
ஆசிய சந்தைகளில் அதிகரித்த முதலீட்டை அடிப்படையாகக் கொண்டது.
இது பரஸ்பர நம்பிக்கையையும் ஆழமான பொருளாதார ஒருங்கிணைப்பையும் பிரதிபலிக்கிறது என்றார்.
எனவே, பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் இருந்து நேர்மறையான முடிவை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
இது முதலீட்டு வாய்ப்புகளைத் தூண்டும் மற்றும் பிராந்திய விநியோகச் சங்கிலிகளை ஆதரிக்கும் என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற ஆசியான், ஜிசிசி உச்சிநிலை மாநாட்டில் பேசும்போது அவர் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2025, 11:13 am