
செய்திகள் மலேசியா
அரசியல் நியமனங்களில் முந்தைய தேமு அரசாங்கம் என்ன செய்தது என்பதை பிரதமர் இறுதியாகப் புரிந்து கொண்டார்: அக்மால்
கோலாலம்பூர்:
அரசியல் நியமனங்களில் முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் என்ன செய்தது என்பதை பிரதமர் இறுதியாகப் புரிந்து கொண்டுள்ளார் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலே கூறினார்.
அரசாங்கத்தில் அரசியல் நியமனங்கள் தொடர்பான பிரச்சினையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இறுதியாகப் புரிந்து கொண்டுள்ளார்.
முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் என்ன செய்தது என்பதை அவர் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டார்.
இதற்காக பிரதமருக்கு எனது நன்றி என்று அக்மால் முகநூல் பதிவில் கூறினார்.
நேற்று ஜோகூர்பாருவில் நடந்த கெஅடிலான் மாநாட்டின் நிறைவு அமர்வில் பேசிய டத்தோசஸ்ரீ அன்வார்,
அரசியல் நியமனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அதிகார துஷ்பிரயோகத்தின் ஒரு வடிவமாக அது இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
கட்சி அரசாங்கமாக மாறும் வரை கட்சி வெற்றிக்கு அளித்த சேவைகள், பங்களிப்புகளுக்கு, சம்பந்தப்பட்ட நபர்கள் அளித்த வெகுமதி இது என்றும் பிரதமர் கூறினார்.
இதன் அடிப்படையில் அரசியல் நியமனங்கள் குறித்து அவர் இறுதியாக புரிந்து கொண்டுள்ளார் என்று அக்மால் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 16, 2025, 10:19 pm
கூடுதல் உத்தரவு தொடர்பில் முன்னாள் ஏஜிக்கு எதிராக நஜிப் போலிஸ் புகார் செய்தார்
June 16, 2025, 10:10 pm
அன்வாருக்கு எதிரான யூசோஃப் ராவுத்தரின் வழக்கு மேலாண்மை செப்டம்பர் 30இல் நடைபெறும்
June 16, 2025, 10:06 pm
நெடுஞ்சாலை நிதி மோசடி: டான்ஸ்ரீயின் வாக்குமூலம் வியாழக்கிழமை பதிவு செய்யப்படும்: அசாம் பாக்கி
June 16, 2025, 10:06 pm
ஈரான் - இஸ்ரேல் மோதலால் வர்த்தக வழிகள் தடுக்கப்படலாம் என்ற கவலைகள் உள்ளன: பிரதமர்
June 16, 2025, 4:50 pm
RON95 எரிபொருள் மானியத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்: பிரதமர் அன்வார்
June 16, 2025, 4:35 pm
எனது தந்தையின் உடல்நலனுக்கு பிரார்த்தனை செய்யுங்கள்: டான்ஸ்ரீ ஹாடி அவாங் மகன் வேண்டுகோள்
June 16, 2025, 4:32 pm