
செய்திகள் மலேசியா
அரசியல் நியமனங்களில் முந்தைய தேமு அரசாங்கம் என்ன செய்தது என்பதை பிரதமர் இறுதியாகப் புரிந்து கொண்டார்: அக்மால்
கோலாலம்பூர்:
அரசியல் நியமனங்களில் முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் என்ன செய்தது என்பதை பிரதமர் இறுதியாகப் புரிந்து கொண்டுள்ளார் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலே கூறினார்.
அரசாங்கத்தில் அரசியல் நியமனங்கள் தொடர்பான பிரச்சினையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இறுதியாகப் புரிந்து கொண்டுள்ளார்.
முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் என்ன செய்தது என்பதை அவர் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டார்.
இதற்காக பிரதமருக்கு எனது நன்றி என்று அக்மால் முகநூல் பதிவில் கூறினார்.
நேற்று ஜோகூர்பாருவில் நடந்த கெஅடிலான் மாநாட்டின் நிறைவு அமர்வில் பேசிய டத்தோசஸ்ரீ அன்வார்,
அரசியல் நியமனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அதிகார துஷ்பிரயோகத்தின் ஒரு வடிவமாக அது இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
கட்சி அரசாங்கமாக மாறும் வரை கட்சி வெற்றிக்கு அளித்த சேவைகள், பங்களிப்புகளுக்கு, சம்பந்தப்பட்ட நபர்கள் அளித்த வெகுமதி இது என்றும் பிரதமர் கூறினார்.
இதன் அடிப்படையில் அரசியல் நியமனங்கள் குறித்து அவர் இறுதியாக புரிந்து கொண்டுள்ளார் என்று அக்மால் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am