
செய்திகள் ASEAN Malaysia 2025
ஆசியான் மூத்த அதிகாரிகள் கூட்டம் இன்று தொடங்கியது
கோலாலம்பூர்:
ஆசியான் மூத்த அதிகாரிகள் கூட்டம் இன்று சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
46-ஆவது ஆசியான் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, இக்கூட்டம் மே 26 முதல் 27-ஆம் தேதி வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.
இந்த அமர்வு காலை 8:30 மணிக்குத் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து மியான்மரில் உள்ள நிலைமையை நிவர்த்தி செய்வதற்கான ஆசியானின் கூட்டுத் திட்டமான ஐந்து-புள்ளி ஒருமித்த கருத்தை செயல்படுத்துவது குறித்த தொடர்ச்சியான முறைசாரா ஆலோசனைகள் நடைபெறும்.
இந்த ஆலோசனைகள் மாலை 4 மணிக்கு மலேசியா, லாவோஸ் மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் மூத்த தூதர்களிடையே விவாதங்கள் தொடங்கும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 26, 2025, 11:13 am