நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

ஆசியான் மூத்த அதிகாரிகள் கூட்டம் இன்று தொடங்கியது

கோலாலம்பூர்: 

ஆசியான் மூத்த அதிகாரிகள் கூட்டம் இன்று சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

46-ஆவது ஆசியான் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, இக்கூட்டம் மே 26 முதல் 27-ஆம் தேதி வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.

இந்த அமர்வு காலை 8:30 மணிக்குத் தொடங்கியது. 

அதைத் தொடர்ந்து மியான்மரில் உள்ள நிலைமையை நிவர்த்தி செய்வதற்கான ஆசியானின் கூட்டுத் திட்டமான ஐந்து-புள்ளி ஒருமித்த கருத்தை செயல்படுத்துவது குறித்த தொடர்ச்சியான முறைசாரா ஆலோசனைகள் நடைபெறும்.

இந்த ஆலோசனைகள் மாலை 4 மணிக்கு மலேசியா, லாவோஸ் மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் மூத்த தூதர்களிடையே விவாதங்கள் தொடங்கும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset