நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேரளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை ஒருநாள் பெய்த மழையில் மோசமாக சேதமடைந்தது

கூரியாத்:

கேரள மாநிலத்தில் ஒரு சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையில், சுமார் 644 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுவந்த ஆறுவழி தேசிய நெடுஞ்சாலை, கடுமையாக சேதமடைந்திருப்பது, கட்டுமானப் பணிகள் குறித்து மாநில மக்களின் கவலையை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், கூரியாத் பகுதியில் கட்டமைக்கப்பட்டு வந்த தேசிய நெடுஞ்சாலை 66-ன் ஒரு பகுதி, ஒரு சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் கடுமையாக சேதமடைந்துள்ளதைக் கண்டித்து உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டுமானப் பணி நடந்துகொண்டிருக்கும்போதே, மழையில் அடித்துச் செல்லப்பட்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலையால், ஒப்பந்தப் பணியை மேற்கொண்டு வருவோருக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நல்லவேளையாக, இந்த சாலை திறக்கப்படாததால் உயிராபத்து நேரிடவில்லை  என்றாலும், இந்த கட்டுமானத்தின்படி, 644 கிலோ மீட்டருக்கு ஆறுவழி நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்தப் பணியும் கேள்விக்குறியாகியிருப்பதாகக் கூறுகிறார்கள் உள்ளூர் மக்கள்.

ஏதோ நிலநடுக்கம் வந்தது போல, சாலை தாறுமாறாக சிதறியும், தண்ணீர் தேங்கியும் காணப்படும் புகைப்படங்களும் விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.

இந்த சாலை மட்டுமல்லாமல், இதன் ஒரு பகுதியாக காசர்கோடு அருகே சர்வீஸ் சாலையும் சேதமடைந்து மண்ணோடு மண்ணாகியிருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset