
செய்திகள் இந்தியா
24 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை: சூதாட்ட செயலிகளை தடை செய்ய மனு மீது ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
புதுடெல்லி:
ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்ய மனு மீது ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஆன்லைனில் சட்ட விரோதமாக இயங்கும் சூதாட்ட செயலிகளை தடை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 24 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில், ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்த 25 பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மீது தெலங்கானா மாநில காவல் நிலையங்களில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் என் கே சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, சட்ட விரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்ய கோரிய மனு குறித்து பதில் அளிக்க ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 6:51 pm
ரஷிய போர் விமான சக்கரங்களில் இயங்கும் ஜெகந்நாதர் ரதம்
June 2, 2025, 6:39 pm
டெல்லியில் தரைமட்டமாக்கப்பட்ட 370 தமிழர் குடியிருப்புகள்
June 2, 2025, 6:33 pm
கேரளாவுக்கு மறுப்பு: மகாராஷ்டிரா வெளிநாட்டு நிதி பெற ஒன்றிய அரசு அனுமதி
June 2, 2025, 6:03 pm
இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா: 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்தனர்
June 1, 2025, 5:52 pm
போர் விமானங்கள் இழந்ததை முதல் முறையாக ஒப்புக் கொண்டது இந்தியா
May 31, 2025, 4:41 pm
கேரளாவில் பெய்துவரும் கனமழையால் 10 பேர் உயிரிழப்பு
May 28, 2025, 10:10 pm
கன்னடத்தின் பண்டைய வரலாறு நடிகர் கமல்ஹாசனுக்கு தெரியாது: முதல்வர் சித்தராமையா
May 27, 2025, 4:34 pm
சென்னை வந்த துபாய் விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு
May 26, 2025, 7:30 pm