நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஶ்ரீ  ரமணனுக்கு சிறப்பு சலுகையா?: ரபிசியின் விமர்சனத்திற்கு டத்தோஶ்ரீ அன்வார் பதில்

ஜொகூர்பாரு:

டத்தோஶ்ரீ ரமணனுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது என்ற  ரபிசியின் விமர்சனத்திற்கு அக் கட்சியில் தலைவரும் பிரதமருமான டத்தோஶ்ரீ அன்வார் பதிலளித்தார்.

15ஆவது பொதுத் தேர்தலுக்கு பின் கட்சியில் புதிதாகச் சேர்ந்த நபர்களின் வேட்புமனுவை அங்கீகரித்தது குறித்து ரபிசி ரம்லி கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்பாக கெஅடிலான்  உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டத்தோஶ்ரீ ரமணனின் வேட்பு மனுவை ரபிசி மறுத்தார்.

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் பரிந்துரைக்கப்பட்டு வெற்றி பெற்ற பிறகு விரைவாக உயர்ந்த முன்னாள் மஇகா உறுப்பினருக்கு என்ன முன்னுரிமை அளிக்கப்பட்டது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் கட்சியின் மத்திய தலைமைத் தேர்தலில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், ரபிசி எழுப்பிய பிரச்சினைகள் கட்சி உச்சமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்.

அவரின் விமர்சனங்கள் வழக்கமானது. பரவாயில்லை. இது குறித்து கூட்டத்தில் இதைப் பற்றி விவாதிப்போம்.

மேலும் பல நபர்களை வேட்பாளர்களாக அங்கீகரித்த போதிலும், தேர்வு செயல்முறை உண்மையில் கட்சி தலைமையகத்தால் செய்யப்பட்டது.

நான் எல்லாவற்றையும் அங்கீகரித்தேன். அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் கட்சியின் உச்சமன்ற குழுவிடம் சொல்லி விட்டேன்.

அதை வடிகட்டினால், அது ஒரு பிரச்சினையாக இருக்கும்.

எனவே விண்ணப்பத்தைக் கொண்டு வரும், கட்சி விதிகளைப் பின்பற்றும், தலைமை அலுவலகத்தால் பரிசீலிக்கப்படும் அனைவருக்கும் நான் ஒப்புதல் அளிப்பேன் என்று அவர் விளக்கினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset