நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தலுக்கான கால அவகாசம் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: சாலை போக்குவரத்துத் துறை

கோலாலம்பூர்: 

சாலைப் போக்குவரத்துத் துறை புதிதாக வடிவமைக்கப்பட்ட மலேசிய ஓட்டுநர் உரிம அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தலுக்கான கால அவகாசம் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக சாலைப் போக்குவரத்துத் துறை இயக்குநர் Datuk Aedy Fadly Ramli தெரிவித்தார். 

இந்த உரிம அட்டயில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது. 

சாலைப் போக்குவரத்துத் துறை புதிதாக வடிவமைக்கப்பட்ட மலேசிய ஓட்டுநர் உரிமம் (LMM) அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப் புதிய உரிம அட்டை இரண்டு வகை விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே தற்போது வழங்கப்படவுள்ளது. 

வெளிநாடுகளுக்குச் செல்லும் மலேசியர்களுக்கும் மலேசியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளன.

உரிமங்களைப் புதுப்பித்த மலேசியர்கள் உரிமத்தின் இலக்கவியல் பதிப்பை மட்டுமே பெறுவார்கள் என்று அவர் கூறினார்.

எல்லா நாடுகளும் MyJPJ செயலியை ஏற்கவில்லை.

தற்போது, சிங்கப்பூர் அதை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் வேறு சில நாடுகள் இன்னும் இலக்கவியல் ஓட்டுநர் உரிமங்களை ஏற்கவில்லை.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset