செய்திகள் மலேசியா
ஆசியான் உச்சநிலை மாநாடு: உச்ச நேரங்களில் கூடுதல் ரேபிட் கேஎல் ரயில் சேவைகள் வழங்கப்படும்
கோலாலம்பூர்:
46-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு மே 23-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றி கூடுதல் ரேபிட் கேஎல் ரயில் சேவைகள் செயல்பாட்டில் இருக்கும் என்று பிரசரானா மலேசியா பெர்ஹாட் தெரிவித்துள்ளது.
மாநாட்டின் போது சாலை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கூடுதல் ரயில் சேவை இயக்கப்படவுள்ளது.
உச்ச நேரங்களில் ரயில் சேவை நேரம் வழக்கமான நாட்களை விட ஒரு மணி நேரம் முன்னதாக செயல்படும் என்று பிரசரானா மலேசியா பெர்ஹாட் தெரிவித்துள்ளது.
காலை 6.30 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கூடுதல் இரயில் சேவை இயக்கப்படும்.
அம்பாங்/ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத்தில் நான்கு நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்படும்.
குறிப்பிட்ட காலக்கட்டத்தில் பயணிகளின் இயக்கத்தை சீராகச் செய்ய உதவும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களில் கூடுதலாக 400 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 2:06 pm
மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை கொன்ற ஆடவர்
March 13, 2026, 2:05 pm
திரெங்கானு அரசு ஊழியர்களுக்கு நோன்புப்பெருநாள் சிறப்பு உதவி
March 13, 2026, 2:01 pm
துர்நாற்றம் வெளிப்படுத்திய மர்ம மரணம்
March 13, 2026, 1:22 pm
பெரித்தா ஹரியானுடன் கைகோர்த்த மலாயா பல்கலைக்கழகம்: 500 பேருக்கு இலவச நோன்பு கஞ்சி
March 13, 2026, 12:50 pm
புதிய பெயர் பெறும் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கம்
March 13, 2026, 12:44 pm
ஜொகூர் இஸ்லாமிய சமயத் துறையின் அதிரடி சோதனை: கள்ள உறவில் சிக்கிய காதல் ஜோடி
March 13, 2026, 12:43 pm
மீன் விலை உயர்த்தப்படக்கூடாது: மலேசிய மீன் வள மேம்பாட்டு வாரியம்
March 13, 2026, 12:41 pm
போர் பதற்றத்திற்கு மத்தியில் கடல் பணியில் 18 மலேசியர்கள்
March 13, 2026, 11:12 am
