நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்தின் ஆதரவை மேலும் அதிகரிக்க தேசியக் கூட்டணி அம்மக்களின் குரல்களுக்கு செவிசாய்க்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

சிரம்பான்:

இந்திய சமுதாயத்தின் ஆதரவை மேலும் அதிகரிக்க தேசியக் கூட்டணி அம்மக்களின் குரல்களுக்கு செவிசாய்க்க வேண்டும்.

சிரம்பான் தொகுதி பெர்சத்து தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை கூறினார்.

நெகிரி செம்பிலானில் கெம்பாரா பெர்சத்து எனும் சந்திப்புக் கூட்டம் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி தலைமையில் நடைபெற்றது.

இதுவொரு  சாதாரண கூட்டம் மட்டுமல்லாமல் பெர்சத்து, தேசியக் கூட்டணி போராட்டத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுபதற்கான ஒரு தளமாக அமைந்திருந்தது.

இக்கூட்டத்தில் மலேசியாவில் முக்கிய அங்கமாக இருக்கும் மலாய்க்காரர் அல்லாத சமூகத்தின், குறிப்பாக இந்திய சமூகத்தின் குரல்களைக் கொண்டு வந்தேன்.

அவர்களின் குறைகளை நாம் உண்மையிலேயே கேட்டு, அவர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவர்களின் வாழ்க்கையை நேரடியாகத்  தீர்வுகளை வழங்கினால் தேசியக் கூட்டணி அவர்களின் ஆதரவை இன்னும் அதிகமாக பெற வேண்டும்.

பொருளாதார, கல்வி வாய்ப்புகளில் சமத்துவம், திறன்கள், தொழில்முனைவோர் துறைகளில் மலாய்க்காரர் அல்லாத இளைஞர்களுக்கு வாய்ப்புகளை அதிகரிப்பது, அடிமட்ட அளவில் உதவி விநியோக முறையை மேம்படுத்துவது,  கட்சித் தொடர்புகளில் இன்னும் உள்ளடக்கிய விவரிப்புக்கான தேவை ஆகிய விவகாரங்களில் கட்சி கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் தேசியக் கூட்டணி கொண்டு வரும் தேர்தல் அறிக்கையும் கொள்கைகளும் விரிவானவையாக இருக்க வேண்டும்.

குறிப்பாக்க அனைத்து இனங்களாலும் புரிந்து கொள்ளப்பட்டு நம்பப்படுபவையாகவும் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

நாம் எண்கள்,  அரசியல் உத்திகளை மட்டுமே நம்பியிருக்க முடியாது. நாம் மக்களின் இதயங்களைத் தொட வேண்டும்.

வெளிப்படையான, நேர்மையான அணுகுமுறையுடன் இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து மலேசியர்களுக்கும் தேசியக் கூட்டணி நம்பிக்கையின் தளமாக மாற்ற முடியும் என்று டத்தோ சரவணக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset