
செய்திகள் மலேசியா
ஒருவர் மீது ஆசிட் வீசும் அளவிற்கு நானும் ஜேடிதியும் கீழ்த்தரமான நிலைக்குத் தாழ்ந்து போகத் தேவையில்லை: துங்கு இஸ்மாயில்
ஜொகூர்பாரு:
ஒருவர் மீது ஆசிட் வீசும் அளவிற்கு நானும் ஜேடிதி கிளப்பும் அவ்வளவு கீழ்த்தரமான நிலைக்குத் தாழ்ந்து போகத் தேவையில்லை.
ஜொகூர் மாநில இடைக்கால சுல்தான், துங்கு இஸ்மாயில் இதனை கூறினார்.
சிலாங்கூர் கால்பந்து வீரர் பைசல் ஹலிம் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்திற்கும் ஜேடிதி கிளப்புக்கும் தொடர்புபடுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனைத்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளையும் கடுமையாக மறுத்த துங்கு இஸ்மாயில்,
இந்த சம்பவத்தை தன்னுடன் இணைக்கும் முயற்சிகளை ஒரு கோழைத்தனமான, பொறுப்பற்ற செயல் என்று விவரித்தார்.
பைசல் ஹலிம் சம்பவத்தில், என்னை இணைக்க முயற்சிக்கும் கிசுகிசுக்கள், ஊகங்கள் இருந்தன.
நானும் ஜேடிடியும் அந்த அளவுக்குக் கீழ்த்தரமாகச் செல்லத் தேவையில்லை. இதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
எனக்கு ஏதாவது சொல்லவோ செய்யவோ இருந்தால், இதுபோன்ற கோழைத்தனமான செயல்களுக்குப் பின்னால் நான் ஒளிந்து கொள்ள மாட்டேன் என்று அவர் உறுதியாக கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2025, 4:30 pm
ஹஜ் பெருநாளை முன்னிட்டு 100 மாடுகளைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தானமாக வழங்குகிறார்
May 20, 2025, 4:23 pm
பாராங்கத்தியைக் கொண்டு ஆடவரைத் தாக்கிய கும்பல்: மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது
May 20, 2025, 4:10 pm
ஆசியான் உச்சநிலை மாநாடு: உச்ச நேரங்களில் கூடுதல் ரேபிட் கேஎல் ரயில் சேவைகள் வழங்கப்படும்
May 20, 2025, 4:09 pm
சிலாங்கூரில் மின்னியல் சிகரெட்டுகளுக்கன விளம்பரங்களுக்குத் தடை
May 20, 2025, 4:03 pm
பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு முத்தமிழ் விழா
May 20, 2025, 12:49 pm