நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மொஹைதீனுக்கு எதிரான நிந்தனை வழக்கு விசாரணை: புதிய நிதிபதி வழக்கை செவிமடுப்பார்

கோலாலம்பூர்: 

முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ மொஹைதீன் யாசினுக்கு எதிரான நிந்தனை வழக்கு விசாரணையானது புதிய உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 

டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் மேற்கொண்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் நீதிபதி டத்தோ அஹ்சார் அப்துல் ஹமிட் இந்த தீர்ப்பினை வழங்கினார். 

தற்போது இந்த வழக்கு விசாரணையை புதிய நீதிபதி  டத்தோ முஹம்மத் ஜாமில் ஹுசைன் செவிமடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த விண்ணப்பத்திற்கு அரசு துணை வழக்கறிஞர்கள் அப்துல் மாலிக் அயோப், நடியா மொஹம்மத் இஷாரளி இருவரும் எந்தவொரு ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. 

முன்னதாக, நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலின் பிரச்சாரத்தின் போது நிந்தனை வார்த்தைகளை வெளியிட்டதாக பெர்சத்து கட்சி தலைவருமான டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் மீது வழக்கு தொடரப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset