
செய்திகள் மலேசியா
மொஹைதீனுக்கு எதிரான நிந்தனை வழக்கு விசாரணை: புதிய நிதிபதி வழக்கை செவிமடுப்பார்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ மொஹைதீன் யாசினுக்கு எதிரான நிந்தனை வழக்கு விசாரணையானது புதிய உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் மேற்கொண்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் நீதிபதி டத்தோ அஹ்சார் அப்துல் ஹமிட் இந்த தீர்ப்பினை வழங்கினார்.
தற்போது இந்த வழக்கு விசாரணையை புதிய நீதிபதி டத்தோ முஹம்மத் ஜாமில் ஹுசைன் செவிமடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த விண்ணப்பத்திற்கு அரசு துணை வழக்கறிஞர்கள் அப்துல் மாலிக் அயோப், நடியா மொஹம்மத் இஷாரளி இருவரும் எந்தவொரு ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலின் பிரச்சாரத்தின் போது நிந்தனை வார்த்தைகளை வெளியிட்டதாக பெர்சத்து கட்சி தலைவருமான டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் மீது வழக்கு தொடரப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2025, 8:59 am
சைபர் பாதுகாப்பு திறன் பயிற்சித் திட்டம்; வேலை வாய்ப்புடன் இந்திய இளைஞர்களுக்கு வழ...
May 30, 2025, 9:36 pm
அம்னோவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன்; விரைவில் கெஅடிலானில் இணைவேன்:...
May 30, 2025, 9:34 pm
வெப்பமான வானிலை செப்டம்பர் மாதம் வரை தொடரும்: மெட் மலேசியா
May 30, 2025, 9:33 pm
தியாகப் பெருநாளை முன்னிட்டு 2 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பய...
May 30, 2025, 8:18 pm
புகையிலை ஒரு மெளன கொலையாளி; மே 31 உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில் புகைப்பதை நிறுத...
May 30, 2025, 5:35 pm
10 ரிங்கிட்டுக்கு நாசி கண்டார்; அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்க நல்ல முயற்சி: டத்த...
May 30, 2025, 5:32 pm
சமூகத்தை மாற்ற நிறைய வழிகள் உள்ளன: ரபிஸி ரம்லி
May 30, 2025, 5:30 pm
சபா ஊழல் விசாரணைகளில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: பிரதமர்
May 30, 2025, 4:36 pm
அனைத்துலக புத்தக கண்காட்சியில் ஒரே தமிழ் புத்தக நிறுவனமான ஜெயபக்தி இடம் பெற்றுள்ள...
May 30, 2025, 1:52 pm