செய்திகள் இந்தியா
போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா பதிலடி
ஸ்ரீநகர்:
போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சிலமணி நேரங்களில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது பதற்றத்துக்கு வழிவகுத்துள்ளது.
இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
பாகிஸ்தான் அனுப்பிய அனைத்து டுரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த ராணுவ தாக்குதல்கள் இன்று மாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது.
போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்புகள் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் ஜம்மு காஷ்மீர் எல்வையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நிறுத்த உடன்பாட்டை மீறி இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. சண்டை நிறுத்தம் என்று இரு நாடுகளும் அறிவித்த 3 மணி நேரத்தில் கதுவா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சேரா உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தானின் இந்த அத்துமீறல் தொடர்ந்துள்ளது.
பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்கி வருகிறது. இதற்கு இந்தியாவும் உடனடி பதிலடி கொடுத்தது.
ஜம்மு, ரியாஷி ,ஸ்ரீநகர், ரஜோரி, கந்தர்பால் பகுதிகளில் பாகிஸ்தான் டுரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.
ஸ்ரீநகரில் உள்ள ராணுவ தலைமையகத்தையும் தாக்க பாகிஸ்தான் முயற்சித்துள்ளது.
ஆர்எஸ்புரா பகுதியில் சிறிய ரக ஆயுதங்கள் வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து அங்கு மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது.
நக்ரோட்டாவிலும் பாகிஸ்தாம் அனுப்பிய டுரோன்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 16, 2026, 4:29 pm
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் கை விரல்களில் அழியும் மை: ராகுல் கடும் கண்டனம்
January 15, 2026, 11:13 pm
மும்பை மாநகராட்சி தேர்தல்: அழியா மைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் மார்க்கர் பேனா
January 12, 2026, 3:23 pm
மும்பை தேர்தலில் போட்டியிடும் பிஜேபி கவுன்சிலருக்கு ரூ.124 கோடி சொத்து
January 10, 2026, 7:56 pm
ஒடிசாவில் அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக தனியார் விமானம்: 6 பேர் காயம்
January 9, 2026, 6:17 pm
இந்தியாவிலேயே காகிதப் பயன்பாடு இல்லாத முதல் நீதிமன்றம்
January 4, 2026, 4:26 pm
திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து
January 2, 2026, 3:20 pm
புத்தாண்டு தினத்தில் சபரிமலையில் திரண்ட பக்தா்கள்
December 31, 2025, 12:08 pm
முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு ஒன்றிய அரசு இதுவரை வீடு ஒதுக்காமல் இழுத்தடிப்பு
December 29, 2025, 1:18 pm
