செய்திகள் மலேசியா
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டிற்கு 11 லட்சம் ரூபாய் நிதி; நாங்கள் அயலகத் தமிழர்கள் அல்ல: டத்தோஸ்ரீ இக்பால்
திருச்சி:
தமிழ்நாட்டிற்கு மலேசியத் தமிழர்கள் அந்நியர்கள் அல்ல என்று இஸ்லாமிய கல்வி அறவாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால் வலியுறுத்தினார்.
தமிழ் நாட்டில் இருந்து மலேசியா உட்பட பல நாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்று தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அப்படி சென்றவர்களை அயலகத் தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
அயலக தமிழர்கள் என்றால் அந்நிய நாட்டினர் என்றுதான் அர்த்தப்படுகிறது.
அதன் அடிப்படையில் நாங்கள் அந்நிய நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் அல்ல.
காரணம் அகண்ட தமிழகத்ததைச் சேர்ந்த ஒரு பகுதி தான் இப்போது பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
அப்படி என்றல் நாங்கள் எப்படி அந்நியத் தமிழர்களாவோம். இன்று உலகெங்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
ஆகையால் மலேசியத் தமிழர்களை இனி அயலக தமிழர்கள் என அழைக்கக் கூடாது.
அகண்ட தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் என அழைப்பதே பொருத்தம்.
இந்த விவகாரத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு திருச்சியில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இம் மாநாட்டில் மலேசியாவில் இருந்து 50க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களின் ஆதரவுடன் இம்மாநாட்டிற்கு 11 லட்சம் ரூபாய் நிதியாக வழங்கப்பட்டது.
அடுத்தாண்டு இம் மாநாடு மலேசியாவில் நடத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
ஏற்கெனவே நாம் ஒரு மாநாட்டை சிறப்பாக நாம் நடத்தி முடித்திருக்கிறோம். அடுத்த மாநாட்டையும் சிறப்பாக நடத்த நாங்கள் தயார் என்று டத்தோஸ்ரீ முஹம்ம முஹம்மது இக்பால் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2026, 10:49 pm
நஜிப்பின் வீட்டுக் காவல்; மாமன்னரின் முடிவை எதிர்ப்பது அரசியலமைப்புக்கு முரணானது: ஜாஹித்
September 19, 2026, 10:48 pm
பெர்சத்து தனியாக போட்டியிட முடியாது; கூட்டணிக்கு நண்பர்கள் தேவை: டான்ஸ்ரீ மொஹைதின்
September 19, 2026, 10:46 pm
அரசியலமைப்பின் கீழ் உள்ள மாமன்னரின் மன்னிப்பு அதிகாரத்தை மதியுங்கள்: டத்தோஸ்ரீ ரமணன்
September 19, 2026, 10:45 pm
அந்தோனி லோக் விலகல்; இதை தான் ஆர்டர் செய்தது ஒன்று, வந்தது ஒன்று எனக் கூறுவார்கள்: ங்காவை சீண்டிய அக்மால்
September 19, 2026, 6:48 pm
போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து அந்தோனி லோக் விலகல்
September 19, 2026, 4:28 pm
கல்வி என்பது வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகச் சிறந்த முதலீடு: மலேசியாவுக்கான இந்தியத் தூதர் ஸ்ரீ சோம்நாத் கோஷ்
September 19, 2026, 4:15 pm
