செய்திகள் மலேசியா
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டிற்கு 11 லட்சம் ரூபாய் நிதி; நாங்கள் அயலகத் தமிழர்கள் அல்ல: டத்தோஸ்ரீ இக்பால்
திருச்சி:
தமிழ்நாட்டிற்கு மலேசியத் தமிழர்கள் அந்நியர்கள் அல்ல என்று இஸ்லாமிய கல்வி அறவாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால் வலியுறுத்தினார்.
தமிழ் நாட்டில் இருந்து மலேசியா உட்பட பல நாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்று தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அப்படி சென்றவர்களை அயலகத் தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
அயலக தமிழர்கள் என்றால் அந்நிய நாட்டினர் என்றுதான் அர்த்தப்படுகிறது.
அதன் அடிப்படையில் நாங்கள் அந்நிய நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் அல்ல.
காரணம் அகண்ட தமிழகத்ததைச் சேர்ந்த ஒரு பகுதி தான் இப்போது பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
அப்படி என்றல் நாங்கள் எப்படி அந்நியத் தமிழர்களாவோம். இன்று உலகெங்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
ஆகையால் மலேசியத் தமிழர்களை இனி அயலக தமிழர்கள் என அழைக்கக் கூடாது.
அகண்ட தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் என அழைப்பதே பொருத்தம்.
இந்த விவகாரத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு திருச்சியில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இம் மாநாட்டில் மலேசியாவில் இருந்து 50க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களின் ஆதரவுடன் இம்மாநாட்டிற்கு 11 லட்சம் ரூபாய் நிதியாக வழங்கப்பட்டது.
அடுத்தாண்டு இம் மாநாடு மலேசியாவில் நடத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
ஏற்கெனவே நாம் ஒரு மாநாட்டை சிறப்பாக நாம் நடத்தி முடித்திருக்கிறோம். அடுத்த மாநாட்டையும் சிறப்பாக நடத்த நாங்கள் தயார் என்று டத்தோஸ்ரீ முஹம்ம முஹம்மது இக்பால் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
