
செய்திகள் மலேசியா
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டிற்கு 11 லட்சம் ரூபாய் நிதி; நாங்கள் அயலகத் தமிழர்கள் அல்ல: டத்தோஸ்ரீ இக்பால்
திருச்சி:
தமிழ்நாட்டிற்கு மலேசியத் தமிழர்கள் அந்நியர்கள் அல்ல என்று இஸ்லாமிய கல்வி அறவாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால் வலியுறுத்தினார்.
தமிழ் நாட்டில் இருந்து மலேசியா உட்பட பல நாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்று தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அப்படி சென்றவர்களை அயலகத் தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
அயலக தமிழர்கள் என்றால் அந்நிய நாட்டினர் என்றுதான் அர்த்தப்படுகிறது.
அதன் அடிப்படையில் நாங்கள் அந்நிய நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் அல்ல.
காரணம் அகண்ட தமிழகத்ததைச் சேர்ந்த ஒரு பகுதி தான் இப்போது பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
அப்படி என்றல் நாங்கள் எப்படி அந்நியத் தமிழர்களாவோம். இன்று உலகெங்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
ஆகையால் மலேசியத் தமிழர்களை இனி அயலக தமிழர்கள் என அழைக்கக் கூடாது.
அகண்ட தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் என அழைப்பதே பொருத்தம்.
இந்த விவகாரத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு திருச்சியில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இம் மாநாட்டில் மலேசியாவில் இருந்து 50க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களின் ஆதரவுடன் இம்மாநாட்டிற்கு 11 லட்சம் ரூபாய் நிதியாக வழங்கப்பட்டது.
அடுத்தாண்டு இம் மாநாடு மலேசியாவில் நடத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
ஏற்கெனவே நாம் ஒரு மாநாட்டை சிறப்பாக நாம் நடத்தி முடித்திருக்கிறோம். அடுத்த மாநாட்டையும் சிறப்பாக நடத்த நாங்கள் தயார் என்று டத்தோஸ்ரீ முஹம்ம முஹம்மது இக்பால் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 1:27 pm
ஷாராவின் தாயாரை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை தடயவியல் மருத்துவர் மறுத்தார்
September 17, 2025, 1:25 pm
கூட்டரசுப் பிரதேச மாநில தமிழ்ப்பள்ளிகள் இடையிலான மாபெரும் பூப்பந்து போட்டி: செப்டம்பர் 27இல் நடைபெறும்
September 17, 2025, 1:24 pm
சபா, கிளந்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
September 17, 2025, 1:23 pm
கேஎல்ஐஏ 2இன் மின்சார மூலத்தை மலேசிய ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் மறுவடிவமைப்பு செய்ய வேண்டும்: அந்தோனி லோக்
September 17, 2025, 1:22 pm
சபா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொழுகைகளை நடத்த பள்ளிவாசல், சூராவ்களுக்கு உத்தரவு
September 17, 2025, 11:13 am
சோலார் வழக்கை விசாரிக்கும் நீதிபதியை நீக்கக் கோரிய ரோஸ்மாவின் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது
September 17, 2025, 11:01 am
மக்கள் மதிப்பீடு செய்வதற்கு ஏதுவாக பிரதமர் வேட்பாளரை தேசியக் கூட்டணி அறிவிக்க வேண்டும்: துன் பைசால்
September 17, 2025, 11:00 am
தேசியக் கூட்டணியை வழிநடத்த பாஸ் இப்போது தயாராக உள்ளது: தக்கியூடின்
September 17, 2025, 10:59 am
துவாஸ் சோதனைச் சாவடியில் 18,400 மின்சிகரெட்டுகள் பறிமுதல்: மலேசியர் கைது
September 16, 2025, 11:48 pm