நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி

பாரிஸ்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு பிஎஸ்ஜி அணியினர் முன்னேறி உள்ளனர்.

பார்க் டி பிரின்ஸ் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் அர்செனல் அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.

இதில் பிஎஸ்ஜி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பிஎஸ்ஜி அணியின் வெற்றி கோல்களை பாபியன் ரூய்ஸ், அக்ராஃப் ஹகிமி ஆகியோர் அடித்தனர்.

இரு ஆட்டங்களின் முடிவில் 3 -1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிஎஸ்ஜி அணியினர் ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண இறுதியாட்டத்திற்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset