
செய்திகள் வணிகம்
இந்திய ராணுவ தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் பங்குச் சந்தை 6,272 புள்ளிகள் வீழ்ச்சி
இஸ்லாமாபாத்:
இந்திய ராணுவம் நேற்றிரவு நடத்திய தாக்குதல் பாகிஸ்தான் பங்குச் சந்தைகளின் வர்த்தகத்தில் கடுமையாக எதிரொலித்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு கணிசமான இழப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தான் பங்குச் சந்தையில் கராச்சி-100 குறியீட்டெண் 6,272 புள்ளிகள் அதாவது 6 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முந்தைய செவ்வாய்க்கிழமை வர்த்தகம் 1,13,568.51 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில் புதன்கிழமை வர்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டு 1,07,296.64 புள்ளிகளாக ஆனது. இதேபோன்று, கேஎஸ்இ-100 குறியீடும் 3.7 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
அதேநேரம், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடக்கத்தில் மந்த நிலையில் காணப்பட்டாலும் இறுதியில் சென்செக்ஸ் 105.71 புள்ளிகள் ஏற்றம் கண்டு 80,746.78 புள்ளிகளில் நிலைபெற்றது. நிப்டி 34.80 புள்ளிகள் உயர்ந்து 24,414.40-ல் நிலைத்தது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல் 23 முதல் மே 5 வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தான் பங்குச் சந்தைகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கேஎஸ்இ-100 குறியீட்டெண் 3.7 சதவீதம் குறைந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am