செய்திகள் வணிகம்
இந்திய ராணுவ தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் பங்குச் சந்தை 6,272 புள்ளிகள் வீழ்ச்சி
இஸ்லாமாபாத்:
இந்திய ராணுவம் நேற்றிரவு நடத்திய தாக்குதல் பாகிஸ்தான் பங்குச் சந்தைகளின் வர்த்தகத்தில் கடுமையாக எதிரொலித்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு கணிசமான இழப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தான் பங்குச் சந்தையில் கராச்சி-100 குறியீட்டெண் 6,272 புள்ளிகள் அதாவது 6 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முந்தைய செவ்வாய்க்கிழமை வர்த்தகம் 1,13,568.51 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில் புதன்கிழமை வர்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டு 1,07,296.64 புள்ளிகளாக ஆனது. இதேபோன்று, கேஎஸ்இ-100 குறியீடும் 3.7 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
அதேநேரம், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடக்கத்தில் மந்த நிலையில் காணப்பட்டாலும் இறுதியில் சென்செக்ஸ் 105.71 புள்ளிகள் ஏற்றம் கண்டு 80,746.78 புள்ளிகளில் நிலைபெற்றது. நிப்டி 34.80 புள்ளிகள் உயர்ந்து 24,414.40-ல் நிலைத்தது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல் 23 முதல் மே 5 வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தான் பங்குச் சந்தைகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கேஎஸ்இ-100 குறியீட்டெண் 3.7 சதவீதம் குறைந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 6, 2025, 6:44 pm
MS Gold 5ஆவது கிளையை லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் திறந்து வைத்தார்
December 4, 2025, 7:24 am
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு ரூ.90 ஆக சரிவு
November 24, 2025, 5:35 pm
200 ரிங்கிட் வெகுமதியுடன் Get Driver திட்டத்தை ஜிவி ரைட் அறிமுகப்படுத்துகிறது
November 19, 2025, 4:12 pm
ஆர்சிபி அணி படத் தயாரிப்பு நிறுவனத்திடம் விலை பேசப்படுகிறது?
November 14, 2025, 4:21 pm
உணவு தயாரிக்கும் தொழில்துறையில் பீடுநடை போடும் பிரான்சிஸ் மார்ட்டின்
November 11, 2025, 2:35 pm
பெரோடுவா மின்சார கார் அறிமுகம்; தேசிய விழா பட்டியலில் உள்ளது: பிரதமர்
November 5, 2025, 3:47 pm
பெர்மிம் பேரவையின் வீட்டிலிருந்தே வணிகம்: இணையத்தில் விரிவாக்கம் செய்யும் கருத்தரங்கு
October 29, 2025, 12:21 pm
