நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சான்றளிக்கப்பட்ட நெல் விதை மையம் ஆண்டு தோறும் 5,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யும்: மாட் சாபு

பாரிட் புந்தார்: 

பேராக் விவசாயிகள் அமைப்பின் சான்றளிக்கப்பட்ட சான்றளிக்கப்பட்ட நெல் விதை மையம் ஆண்டு தோறும் 5,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யும் என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் சாபு தெரிவித்தார். 

பேராக் முழுவதும் உள்ள 16,000 விவசாயிகளுக்கு இந்த மையம் பயனளிக்கும் என்றும், விவசாய சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தரமான சான்றளிக்கப்பட்ட நெல் விதைகளுக்கான குறிப்பு புள்ளியாக இது செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இந்த உற்பத்தி மையம் நிறுவப்பட்டதன் மூலம், இந்த மாவட்டத்தில் நெல் வளர்ச்சி ஏற்படும் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறினார். 

மேலும், இந்த நெல் உற்பத்தி மையம் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset