
செய்திகள் இந்தியா
போர் பதற்றத்தின் எதிரொலி: ஆப்கானிஸ்தான் உலர் பழங்களின் விலை இந்தியாவில் 25% வரை உயர்கிறது
புதுடெல்லி:
அட்டாரி - வாகா எல்லை மூடல் ஆப்கானிஸ்தான் உலர் பழ வர்த்தகத்தை பாதித்துள்ளது. இதனால், இந்தியாவில் அதன் விலை 10 முதல் 25% வரை உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால், இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய அரசும் பாகிஸ்தானின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இதில் ஒன்றாக, பஞ்சாபிலுள்ள அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டுள்ளது. இந்த எல்லை வழியாகத்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அந்நாட்டின் உலர் பழங்கள் இறக்குமதி ஆகின்றன.
உலகிலேயே ஆப்கானிஸ்தானில் விளையும் உலர் பழங்களுக்கு பெரிய தேவை உள்ளது. உலர் பழங்கள் விற்பனை என்பது ஆப்கானிஸ்தானுக்கு ஒரு நல்ல பொருளாதாரப் பலனையும் அளிக்கிறது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலால், அட்டாரி - வாகா எல்லை வழியாக, ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் இந்தியாவுக்கான உலர் பழ வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுபாடுகள் காரணமாக இந்தியாவில் உலர் பழங்கள் விலை 10 முதல் 25 சதவிகிதம் உயரும் எனக் கருதப்படுகிறது. இது இந்தியப் பயனர்களைப் பெரிய அளவில் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am