
செய்திகள் இந்தியா
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
ஹைதராபாத்:
தென் மாநிலங்களில் சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தவிர்க்க கூடிய வாய்ப்பிருந்தும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
பெரும்பாலும் சுகப்பிரசவத்திற்கு சாத்தியம் இல்லாதவர்களுக்கு முன்கூட்டியே மருத்துவரால் சிசேரியன் முறை தேர்வு செய்யப்படும். அப்படி இல்லையென்றால் சுகப்பிரசவத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அது கைகொடுக்காத நிலையில் அவசர அவசரமாக சிசேரியன் முறை தேர்வு செய்யப்படும். அப்படி எந்த சிக்கலும் இல்லாத போதும் திடீரென திட்டமிட்டு செய்யப்படும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை தென் மாநிலங்களில் அதிகரித்துள்ளது.
சுமார் 21,500 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 44.3% பெண்கள் சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுகொண்டது தெரியவந்துள்ளது. அதில் 13.9 % பெண்கள் எந்த அவசர நிலையும் இல்லாமல் மருத்துவ சிக்கல்கள் இல்லாமல் சிசேரியன் சிகிச்சை முறையை மேற்கொண்டுள்ளதாக வெளியாகியுள்ள தரவுகள் அதிர்சியளிக்கும் விதமாக உள்ளது.
தெலங்கானாவில் அதிகபட்சமாக 8.4% பெண்கள் தவிர்க்க கூடிய வாய்ப்பு இருந்தும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுகொண்டுள்ளனர்.
தென் மாநிலங்களில் 96.5 % கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பதும், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 25-34 வயதுடைய பெண்கள் அதிகமாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுகொள்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றனர்.
அதிலும் படித்த பெண்களே அதிகமாக இந்த முறையில் குழந்தை பெற்றுகொள்வதாகவும், முதல் குழந்தையை பெற்றுகொள்ளும் பெண்கள் சிசேரியன் முறையை அதிகம் நாடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தவிர்க்க கூடிய வாய்ப்பிருந்தும் சிசேரியன் செய்வதால் அறுவை சிகிச்சைக்குள் ஏற்படும் ஆபத்து, அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் சிக்கல்களால் தாய், குழந்தையின் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகலாம் என கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பாகிஸ்தான் நாட்டின் தரை வழி எல்லையை மூடியது இந்தியா
April 23, 2025, 12:40 pm