
செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதி. குமணன் நினைவு விழா; மே 1ஆம் தேதி நடைபெறுகிறது: திருநாவுக்கரசு
சிரம்பான்:
இளையத் தமிழவேள் ஆதி. குமணன் நினைவு விழா வரும் மே 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இவ்விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மு. திருநாவுக்கரசு இதனை கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை ஏற்பாடு செய்யப்படுகிறது.
அவ்வகையில் இவ்வாண்டுக்கான விழா வரும் மே 1ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தாமரை குழுமத்தின் தலைமை இயக்குநர் டத்தோ ரெனா ராமலிங்கம் இவ்விழாவிற்கு தலைமையேற்று உரையாற்றவுள்ளார்.
ராகா உதயா சிறப்புரையாற்ற உள்ளார். எம்கே கருணாகரன் வரவேற்புரையும் பாலமுருகன் நன்றியுரையும் ஆற்றவுள்ளனர்.
பொன் கோகிலம் இவ்விழாவை தொகுத்து வழங்கவுள்ளார்.
ஆகவே தமிழ் ஆர்வலர்கள் திரளாக வந்து இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என திருநாவுக்கரசு கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2025, 9:36 pm
நாட்டின் பிரபல பாடகரும் நடிகருமான சிவக்குமார் தனது தாயாருடன் இறந்து கிடந்தார்: போலிஸ்
April 25, 2025, 4:59 pm
டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தொடர்ந்து எம்ஏசிசியிடம் வாக்குமூலம் அளித்து வருகிறார்
April 25, 2025, 4:59 pm
ஐக்கிய அரபு சிற்றரசுடன் தொலைநோக்கு முயற்சியில் கைகோர்ப்பது, நாட்டிற்கு பெருமை: கோபிந்த் சிங்
April 25, 2025, 4:57 pm
பேராக்கில் மின்னியல் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கபட்டலாம்: சிவநேசன்
April 25, 2025, 4:20 pm