நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோய் வாய்ப்பட்ட அண்ணியை  பார்க்க ஆஸ்திரேலியா செல்ல மொஹைதினுக்கு தற்காலிகமாக கடப்பிதழ் வழங்கப்பட்டது

கோலாலம்பூர்:

நோய் வாய்ப்பட்ட அண்ணயை பார்க்க ஆஸ்திரேலியா செல்ல முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ மொஹைதினுக்கு தற்காலிகமாக கடப்பிதழ் வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் உள்ள  அண்ணியை பார்க்க, சர்வதேச கடப்பிதழை தற்காலிகமாகப் பெறுவதற்கான முன்னாள் பிரதமர் டான் ஸ்ரீ முகிதீன் யாசின் விண்ணப்பத்தை இன்று  செஷன்ஸ் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

டான்ஶ்ரீ மொஹைதின் இன்று முதல் மே 20 வரை பயண ஆவணங்களைப் பெற நீதிபதி அசுரா அல்வி அனுமதி அளித்தார்.

வழக்கறிஞர் கீ வெய் லோன் பிரதிநிதித்துவப்படுத்திய மொஹைதின் விண்ணப்பத்தை, துணை அரசு வழக்கறிஞர் நோராலிஸ் மாட் பிரதிநிதித்துவப்படுத்திய அரசு தரப்பு எதிர்க்கவில்லை.

ஜானா விபாவா திட்டத்துடன் தொடர்புடைய தனது பதவியைப் பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து வருமானத்தைப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, ஜாமீன் நிபந்தனையாக கடப்பிதழ் நீதிமன்றத்தின் காவலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset