செய்திகள் மலேசியா
ஐக்கிய அரபு சிற்றரசுடன் தொலைநோக்கு முயற்சியில் கைகோர்ப்பது, நாட்டிற்கு பெருமை: கோபிந்த் சிங்
துபாய்:
ஐக்கிய அரபு சிற்றரசுடன் தொலைநோக்கு முயற்சியில் கைகோர்ப்பது, நாட்டிற்கு பெருமை என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் கூறினார்.
மலேசியா, ஐக்கிய அரபு சிற்றரசு, ருவாண்டா ஆகிய நாடுகள் உலகளாவிய தெற்கு நாடுகளில், செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன.
நான்காம் தொழிற்புரட்சிக்கான மையத்தின் உலகளாவிய கூட்டமைவின் கீழ், இந்த மூன்று நாடுகளும் செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளையும், செயற்கை நுண்ணறிவு நிர்வாக நடைமுறைகளைச் செயல்படுத்தும் முறைமைகளையும் சுற்றுவட்டார நாடுகளை ஊக்குவிப்பதற்கும், திறன்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், தொழில்நுட்பத்தின் முழுப் பயனையும் அடைய உதவுவதற்கும் இணைந்து செயல்படும்.
இதன்வழி செயற்கை நுண்ணறிவு இலக்கவியல் தொழில் நுட்பத்தில் மக்கள் பயனடைவதோடு, பொருளாதாரத்தில் வலுப்பெறவும் உதவும்.
இந்த முயற்சி, Dubai Future Foundation (C4IR-UAE-இன் சட்டப்பூர்வ அமைப்பு), C4IR Rwanda, MyDigital Corporation எனப்படும் மலேசிய இலக்கவியல் கூட்டுறவு கழகம் இடையே நேற்று நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்றத்தின் வழி உறுதியானது.
தற்போது நடைபெற்று வரும் துபாய் செயற்கை நுண்ணறிவு வாரத்தையொட்டி இந்தப் புதிய ஒத்துழைப்பு துவக்கம் கண்டது.
உலகளாவிய நிலையில், மலேசிய ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளுடன் தொலைநோக்கு முயற்சியில் கைகோர்ப்பது, நாட்டிற்கு பெருமையளிக்கிறது.
இதன்வழி செயற்கை நுண்ணறிவு துறையில் உலகளாவிய நிபுணத்துவத்தை ஒன்றிணத்து, வலுப்படுத்துவதோடு, நிலையான எதிர்காலத்தை நோக்கி இலக்கவியல் மாற்றங்களை துரிதப்படுத்த முடியும் என தாம் நம்புவதாக அமைச்சர் கோபிந் சிங் டியோ தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 16, 2026, 1:44 pm
பாரிஸ்க்கு பயணம் செய்யும் மலேசியர்கள் வழிப்பறி திருடர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: தூதர்
March 16, 2026, 1:42 pm
இனவெறி அறிக்கைகளால் இன நல்லிணக்கத்தை சீர்குலைப்பது கண்டிக்கத்தக்கது: கணபதிராவ்
March 16, 2026, 1:41 pm
அம்னோவில் மீண்டும் சேர்வதற்கான மேல்முறையீட்டு கடிதத்தை கைரி சமர்ப்பித்தார்
March 16, 2026, 1:39 pm
பெட்டாலிங் ஜெயாவில் நகைக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற ஆயுதமேந்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்
March 16, 2026, 1:38 pm
ரோஸ்மாவின் ஊழல் மேல்முறையீட்டு விசாரணை: ஜூலை 1 முதல் 3 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
March 16, 2026, 1:37 pm
தம்பூன் முனீஸ்வரர் ஆலயம் புதிய இடத்திற்கு இடமாற்றம்: பக்தர்கள் மகிழ்ச்சி
March 16, 2026, 10:40 am
5 கி.மீ பயணத்திற்கு 80 ரிங்கிட்டா?: விமான நிலையத்தில் சட்டவிரோத டாக்சி ஓட்டுநர் கைது
March 16, 2026, 10:06 am
