நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்பிஎம் பகுப்பாய்வு அறிக்கையில் ஜாலூர் கெமிலாங் தவறாகப் பிரசுரிக்கப்பட்ட செயலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: ஷம்சுல் அஸ்ரி 

கோலாலம்பூர்: 

எஸ்பிஎம் தேர்வு முடிவுகளின் பகுப்பாய்வு அறிக்கையில் ஜாலூர் கெமிலாங் தவறாகப் பிரசுரிக்கப்பட்ட செயலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கத் தலைமை செயலாளர் டான்ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி  அபு பாக்கார் தெரிவித்தார்.

இது விவாகரம் குறித்து விரிவான அறிக்கை வெளியிட கல்வியமைச்சின் தலைமை செயலாளர் டத்தோ டாக்டர் அமினுடின் ஹாசிமிற்கு தாம் உத்தரவிட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஜாலூர் கெமிலாஙை வடிவமைக்கும் போது கவனமாகச் செயல்படுவது அவசியமாகும். 

காரணம் அது நாட்டின் இறையாண்மையின் சின்னமாக செயல்படுகிறது. 

கவனயின்மையால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். 

முன்னதாக, 14 மற்றும் 15-ஆம் பக்கங்களில் உள்ள ஜாலூர் கெமிலாங் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தவறாக உருவாக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset