
செய்திகள் மலேசியா
ஆயிர் கூனிங் இடைத்தேர்தலில் நாளை 31,315 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்
தாப்பா:
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாளை 31,315 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
14 நாள் பிரச்சார காலம் முடிந்ததும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவர்கள் நாளை நிறைவேற்றுவார்கள்.
63 முகப்பிடம் உள்ளடக்கிய மொத்தம் 19 வாக்குச் சாவடிகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
இதில் தோ தன்டீவா சக்தி தேசியப் பள்ளியின் வாக்களிப்பு மையம் மட்டும் மாலை 4 மணிக்கு மூடப்படும்.
வாக்கு எண்ணிக்கை செயல்முறை இங்குள்ள மெர்டேகா மணடபத்தில் நடைபெறும்.
மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, காலையில் வெயில் நிறைந்த வானிலையும், பிற்பகலில் இடியுடன் கூடிய மழையும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயிர் கூனிங் மாநில சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் டாக்டர் முகமது யூஸ்ரி பக்கீர் மும்முனை போட்டியை எதிர்கொள்கிறார்.
அவரை எதிர்த்து தேசியக் கூட்டணி வேட்பாளர்கள் அப்துல் முஹைமின் மாலிக், பிஎஸ்எம் கட்சியின் சார்பில் பவாணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2025, 4:59 pm
டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தொடர்ந்து எம்ஏசிசியிடம் வாக்குமூலம் அளித்து வருகிறார்
April 25, 2025, 4:59 pm
ஐக்கிய அரபு சிற்றரசுடன் தொலைநோக்கு முயற்சியில் கைகோர்ப்பது, நாட்டிற்கு பெருமை: கோபிந்த் சிங்
April 25, 2025, 4:57 pm
பேராக்கில் மின்னியல் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கபட்டலாம்: சிவநேசன்
April 25, 2025, 4:20 pm
துன் மகாதீரின் பெயரை நான் குறிப்பிடவில்லை: ஜாஹித்
April 25, 2025, 4:19 pm
அம்னோ- தேசியக் கூட்டணி ஒத்துழைப்பு?; பகற்கனவு காண வேண்டாம்: ஹம்சாவிறகு ஜாஹித் அறிவுறுத்து
April 25, 2025, 12:47 pm