
செய்திகள் இந்தியா
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
பீகார்:
காஷ்மீரில் சுற்றுப்பயணிகள் மீது தாக்குதல் நடத்திய ஒவ்வொரு பயங்கரவாதியும் அடையாளம் காணப்படுவர், தேடப்படுவர், தண்டிக்கப்படுவர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு எச்சரித்துள்ளார்.
தாக்குதலுக்குப் பிறகு அவர் முதல் முறையாக உரையாற்றிய அவர்,
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே துரத்துவோம். 1.4 பில்லியன் இந்தியர்களின் மன வலிமையைக் கொண்டு பயங்கரவாதிகளின் முதுகெலும்பை உடைப்போம்.
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 27 பேர் மாண்டனர். அவர்களில் 26 பேர் இந்தியர்கள். ஒருவர் நேப்பாளத்தைச் சேர்ந்தவர்.
25 ஆண்டில் காஷ்மீரில் நடத்தப்பட்ட ஆக மோசமான தாக்குதல் அது.
எல்லை கடந்த பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் ஆதரிப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டியது.
பாகிஸ்தானுடன் அரசதந்திர உறவை இந்தியா இறக்கியது. அதோடு தண்ணீர் உடன்பாட்டை ரத்துச் செய்தது.
காஷ்மீரில் தாக்குதல்காரர்களை இந்தியப் பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களும், அதைத் திட்டமிட்டவர்களும் அவர்களின் கற்பனைக்கு எட்டாத விலை கொடுப்பார்கள் என்று இந்தியப் பிரதமர் மோடி எச்சரித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பாகிஸ்தான் நாட்டின் தரை வழி எல்லையை மூடியது இந்தியா
April 23, 2025, 12:40 pm
கோழைத்தனமான வன்முறை: காஷ்மீர் தாக்குதலுக்கு விஜய் கண்டனம்
April 23, 2025, 8:06 am
சவுதி பயணம் பாதியில் ரத்து: பிரதமர் மோடி இந்தியா விரைவு
April 23, 2025, 7:42 am
பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர்: உள்துறை அமைச்சர் அமித் ஷா பெல்காம் சென்றடைந்தார்
April 19, 2025, 2:35 pm
யுனெஸ்கோ அனைத்துலக நினைவு பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம் இடம்பிடித்துள்ளன
April 19, 2025, 12:27 pm