
செய்திகள் இந்தியா
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
பீகார்:
காஷ்மீரில் சுற்றுப்பயணிகள் மீது தாக்குதல் நடத்திய ஒவ்வொரு பயங்கரவாதியும் அடையாளம் காணப்படுவர், தேடப்படுவர், தண்டிக்கப்படுவர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு எச்சரித்துள்ளார்.
தாக்குதலுக்குப் பிறகு அவர் முதல் முறையாக உரையாற்றிய அவர்,
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே துரத்துவோம். 1.4 பில்லியன் இந்தியர்களின் மன வலிமையைக் கொண்டு பயங்கரவாதிகளின் முதுகெலும்பை உடைப்போம்.
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 27 பேர் மாண்டனர். அவர்களில் 26 பேர் இந்தியர்கள். ஒருவர் நேப்பாளத்தைச் சேர்ந்தவர்.
25 ஆண்டில் காஷ்மீரில் நடத்தப்பட்ட ஆக மோசமான தாக்குதல் அது.
எல்லை கடந்த பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் ஆதரிப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டியது.
பாகிஸ்தானுடன் அரசதந்திர உறவை இந்தியா இறக்கியது. அதோடு தண்ணீர் உடன்பாட்டை ரத்துச் செய்தது.
காஷ்மீரில் தாக்குதல்காரர்களை இந்தியப் பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களும், அதைத் திட்டமிட்டவர்களும் அவர்களின் கற்பனைக்கு எட்டாத விலை கொடுப்பார்கள் என்று இந்தியப் பிரதமர் மோடி எச்சரித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 9:00 am
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
September 18, 2025, 8:15 am
தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm