நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது

ஜம்மு:

காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்குப்பின் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து அவசரமாக வெளியேற முயல்வதால் விமான டிக்கெட்டுகளின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இது மக்களைக் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து இந்தியத் தலைநகர் புது டில்லிக்குச் செல்ல முதலில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

விமான டிக்கெட்டுகளின் விலையை ஏற்றாமல் சமநிலையில் வைத்துக்கொள்ளும்படி இந்திய ஆகாயப் போக்குவரத்து அமைச்சு விமான நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டது. 

பலர் விமான நிறுவனங்களைச் சாடுகின்றனர். தாக்குதலைச் சாதகமாக்கி, விமான நிறுவனங்கள் லாபம் பார்க்க முற்படுகின்றன என்று பலர் குறைகூறியுள்ளனர்.

நிலைமையைக் கண்காணித்துப் பயணிகளுக்கு முடிந்தளவு உதவி செய்ய முயல்வதாக IndiGo உட்பட சில விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset