நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2024 எஸ்.பி.எம் பொதுத்தேர்வை  6.246 மாணவர்கள் எழுதவில்லை: டத்தோ அஸ்மான் அட்னான் தகவல் 

கோலாலம்பூர்: 

2024 எஸ்.பி.எம் பொதுத்தேர்வை 6,246 மாணவர்கள் எழுதவில்லை என்று மலேசிய கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அட்னான் கூறினார் 

2023 எஸ்.பி.எம் தேர்வினை 8,676 மாணவர்கள் எழுதாத நிலையில் 2024 எஸ்.பி.எம் தேர்வில் 6,246 மாணவர்கள் எழுதவில்லை. 

பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும் மாணவர்கள் தேர்வு எழுதுவதை அனைத்து தரப்பும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் சொன்னார். 

2024 எஸ்.பி.எம் பொதுத்தேர்வுக்கு 4 லட்சத்து 2 ஆயிரத்து 918 மாணவர்கள் பதிந்துள்ளனர். ஆனால் 2023 எஸ்.பி.எம் பொதுத்தேர்வு  3 லட்சத்து 95 ஆயிரத்து 924 பேர் பதிந்தனர் என்று அவர் தெரிவித்தார். 

2024 எஸ்.பி.எம் தேர்வுக்கு 98.2 விழுக்காடு மாணவர்கள் வருகை தந்து தேர்வினை எழுதினர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset