
செய்திகள் மலேசியா
மலேசியாவிற்கான 8 நாடுகளின் தூதர்களின் பணி நியமனக் கடிதத்தைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் பெற்றுக் கொண்டார்
இஸ்தானா நெகாரா:
மலேசியாவிற்கான 8 நாடுகளின் தூதர்களின் பணி நியமனக் கடிதத்தைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் பெற்றுக் கொண்டார்.
இன்று இஸ்தானா நெகாராவிலுள்ள டேவான் சிங்காசனா கிச்சிலில் நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் பேரரசர் 8 வெளிநாட்டு தூதர்களின் பணி நியமனக் கடிதங்களைப் பெற்றார்.
கியுபாவிலிருந்து Yadira Ledesma Hernandez, ஜியோர்ஜியாவிலிருந்து Irakli Asashvili, யுனைடைட் கிங்டமிலிருந்து Ajay Sharma, புருண்டியிலிருந்து Aloys Bizindavyi, எஸ்தோனியாவிலிருந்து Mait Martinson, நிகாரகுவாவிலிருந்து Mario José Armengol Campos, ருவாண்டாவிலிருந்து Marie Claire Mukasine, மலாவியிலிருந்து Allan Joseph Chintedza ஆகியோர் அந்த 8 வெளிநாட்டு தூதர்களாவர்.
இந்த நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசன், வெளியுறவு அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அம்ரான் முஹம்மத் சின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 20, 2025, 4:30 pm
ஹஜ் பெருநாளை முன்னிட்டு 100 மாடுகளைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தானமாக வழங்குகிறார்
May 20, 2025, 4:23 pm
பாராங்கத்தியைக் கொண்டு ஆடவரைத் தாக்கிய கும்பல்: மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது
May 20, 2025, 4:10 pm
ஆசியான் உச்சநிலை மாநாடு: உச்ச நேரங்களில் கூடுதல் ரேபிட் கேஎல் ரயில் சேவைகள் வழங்கப்படும்
May 20, 2025, 4:09 pm
சிலாங்கூரில் மின்னியல் சிகரெட்டுகளுக்கன விளம்பரங்களுக்குத் தடை
May 20, 2025, 4:03 pm
பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு முத்தமிழ் விழா
May 20, 2025, 12:49 pm