
செய்திகள் மலேசியா
அந்நியத் தொழிலாாளர் பிரச்சினைக்கு மே 1ஆம் தேதிக்குள் நல்ல பதில் கிடைக்குமா?: மிம்தா எதிர்பார்ப்பு
கோலாலம்பூர்:
மலேசிய இந்திய உலோக பொருள் மறுசுழற்சி துறையில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள் என்ற மிம்தாவின் கோரிக்கையை பரிசீலிப்பதாக மனிதவள அமைச்சு அறிவித்துள்ளது.
இத்துறைக்கு கண்டிப்பாக அந்நியத் தொழிலாளர்கள் வழங்கப்படும் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் சிறப்பு அதிகாரி டிக்காமை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினோம்.
மார்ச் 20 ஆம் தேதி டிக்காமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக மிம்தா எனப்படும் மலேசிய இந்தியர் உலோக பொருள் மறுசுழற்சி சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ஆறுமுகம் தெரிவித்தார்.
எங்களுக்கு அந்நியத் தொழிலாளர்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று டிக்கம் கூறியதை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம்.
அந்த வகையில் வரும் மே 1 ஆம் தேதிக்குள் எங்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறினார்.
இதனிடையே 10,000 அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கும்படி கோரிக்கையை முன் வைத்துள்ளோம்.
அந்த அடிப்படையில் எங்களுக்கு கண்டிப்பாக அந்நியத் தொழிலாளர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று மிம்தா செயலாளர் முத்தப்பன் கூறினார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கும்படி அரசாங்கததை வலியுறுத்தி வருகிறோம்.
3டி எனப்படும் இந்த கடினமான துறையில் பணியாற்ற மலேசியர்கள் முன் வருவதில்லை.
ஆகவே எங்களின் கோரிக்கை உடனடியாக பரிசீலனை செய்து அந்நியத் தொழிலாளர்களை மே 1 ஆம் தேதிக்குள் வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்படி முத்தப்பன் கேட்டுக் கொண்டார்.
இன்று மலேசிய இந்தியர் உலோக பொருள் மறுசுழற்சி சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm
முதலை தாக்கியதில் 12 வயது சிறுவன் மரணம்
September 18, 2025, 11:58 am
2026 பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் நல்ல செய்தி காத்திருக்கிறது: ஷம்சுல் அஸ்ரி
September 18, 2025, 10:48 am
பெர்மிம் இளைஞர் தலைமைத்துவ முகாமில் 62 இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
September 18, 2025, 10:46 am
சமையலறையில் கரப்பான் பூச்சிகள், எலிகள்: பினாங்கில் பிரபலமான உணவகம் தற்காலிகமாக மூட உத்தரவு
September 18, 2025, 10:24 am
5 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை இன்று மதியம் வரை நீடிக்கும்
September 18, 2025, 10:23 am
ஆசியான் வணிக மாநாடு; வட்டார பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் மலேசியாவின் உறுதிப்பாட்டின் சான்றாகும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 18, 2025, 10:21 am