நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆபாச உள்ளடக்க புகைப்படத்தை வைத்திருந்த 16 வயது இளைஞர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது

கூலாய்: 

கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி ஆபாச உள்ளடக்க புகைப்படத்தை வைத்திருந்ததற்கும் தணிக்கை செய்ததற்கும் 16 வயது இளைஞர் இங்குள்ள கூலாய் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். 

பாச உள்ளடக்க பொருட்களை வைத்திருந்த குற்றத்தை குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர் குற்றத்தை  ஒப்புக்கொண்டார். 

இருப்பினும், சிறார்களை உட்படுத்திய ஆபாச உள்ளடக்க படங்களை தணிக்கை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்தார். 

மாஜிஸ்டிரேட் ஆர். ஷாலினி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அவர் இந்த ஒப்புதலை வழங்கினார். 

முதலாவது குற்றச்சாட்டில், குற்றஞ்சாட்டப்பட்டவர் 14 ஆபாச உள்ளடக்க படங்களைத் தனது கைப்பேசியில் கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. 

இரண்டாவது குற்றச்சாட்டில், 17 வயது பெண்ணுக்கு எதிராக ஆபாச உள்ளடக்கத்தைக் கொண்டிருந்ததாக குற்றஞ்ச்சாட்டப்பது. இந்த குற்றத்தை ஏப்ரல் 9ஆம் தேதி மதியம் 12.40 மணியளவில் அவர் புரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

2017 சிறார்கள் பாலியல் குற்றங்கள் சட்டத்தின் செக்‌ஷன் 5, குற்றவியல் சட்டம் 292(2) இன் கீழும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது 

தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் பினைத் தொகை  4 ஆயிரம் ரிங்கிட் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் 23ஆம் தேதி மறு செவிமடுக்கப்படும்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset