
செய்திகள் மலேசியா
உரிமையாளர்கள் வரி செலுத்தாததால் 1,082 லோட் நிலங்களை பகாங் அரசு கைப்பற்றியது: மந்திரி புசார்
குவாந்தான்:
உரிமையாளர்கள் வரி செலுத்தாததால் 1,082 லோட் நிலங்களை பகாங் மாநில அரசு கைப்பற்றியது.
பகாங் மந்திரி புசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் இதனை கூறினார்.
நிலத்தை கைப்பற்றும் நடவடிக்கை செயல்படுத்தப்படுவதற்கு முன்பு, நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும்.
நிலுவைத் தொகையை முதலில் செலுத்த வேண்டும் என்றுவலியுறுத்தப்படும்.
இன்று வரை, பகாங் மாநிலம் முழுவதும் 1,082 நில உரிமைகள் நில நிர்வாகிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த அபராத வருவாய் 1.4 மில்லியன் ரிங்கிட்டுக்ம் அதிகமாகும். வரி செலுத்தவில்லை என்றால் நிலத்தைக் கைப்பற்றுவோம்.
ஆனால் நாங்கள் அறிவிப்பு கொடுத்தால், நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவோம் என்று அர்த்தம்.
இன்று குவாந்தனில் உள்ள விஸ்மா ஸ்ரீ பகாங்கில் நடந்த பகாங் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2025, 4:30 pm
ஹஜ் பெருநாளை முன்னிட்டு 100 மாடுகளைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தானமாக வழங்குகிறார்
May 20, 2025, 4:23 pm
பாராங்கத்தியைக் கொண்டு ஆடவரைத் தாக்கிய கும்பல்: மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது
May 20, 2025, 4:10 pm
ஆசியான் உச்சநிலை மாநாடு: உச்ச நேரங்களில் கூடுதல் ரேபிட் கேஎல் ரயில் சேவைகள் வழங்கப்படும்
May 20, 2025, 4:09 pm
சிலாங்கூரில் மின்னியல் சிகரெட்டுகளுக்கன விளம்பரங்களுக்குத் தடை
May 20, 2025, 4:03 pm
பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு முத்தமிழ் விழா
May 20, 2025, 12:49 pm