செய்திகள் மலேசியா
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக 3 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்: டத்தோ குமார்
கோலாலம்பூர்:
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக 3 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.
இந்திய அதிகாரிகளுடன் இணைந்து ஜாக் ஸ்பாரோ என்ற பெயரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதான மூன்று நபர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்காக தேடப்படும் சந்தேக நபர்களாக உள்ளனர்.
மும்பை அதிகாரிகளின் உதவியுடன் அவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டு, இன்று மாலை சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 130வி-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
இது ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாதது மற்றும் இருபது ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்கிறது.
இந்திய அதிகாரிகளின் நெருக்கமான ஒத்துழைப்புக்கு போலிஸ் நன்றி தெரிவிக்கிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 28, 2026, 10:04 pm
அமலாக்கத்தில் உள்ள பலவீனங்களை சரிசெய்ய ஒரு வாரம் அவகாசம்: பொறுமையை இழந்த பிரதமர்
January 28, 2026, 10:03 pm
பினாங்கு தைப்பூச விழாவை முன்னிட்டு LINERZ Motorsports ஏற்பாட்டில் மாபெரும் தண்ணீர் பந்தல்
January 28, 2026, 8:19 pm
கோவில் ஹராம் என்ற வார்த்தையின் பயன்பாட்டிற்கு அரசு தடை விதிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
January 28, 2026, 8:17 pm
மனிதவள அமைச்சின் மடானி பக்தி தைப்பூசம் சேவை மையம் மீண்டும் பத்துமலையில் அமைக்கப்படுகிறது
January 28, 2026, 7:22 pm
தைப்பூசம் முன்னிட்டு ஈப்போ நகரில் 10 பிரதான சாலைகள் தற்காலிகமாக மூடப்படும்
January 28, 2026, 5:31 pm
