நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷ்யாவில் 50 பேரை ஏற்றிச்சென்ற விமானம் வெடித்து சிதறியது: யாரும் உயிர்பிழைத்ததாக அறிகுறி இல்லை

மாஸ்கோ:

ரஷ்யாவில் 50 பேரை ஏற்றிச்சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.

அமுர் (Amur) என்ற வட்டாரத்தில் விபத்து நடந்தது. அதில் யாரும் உயிர்பிழைத்ததற்கான அறிகுறிகள் இல்லையென்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அன்காரா ஏர்லைன்ஸுக்குச் (Angara Airlines) சொந்தமான விமானம் பிளாகோவெஷ்சென்ஸ்க் (Blagoveshchensk) என்ற நகரிலிருந்து டின்டா (Tynda) என்ற இடத்துக்குப் பயணம் செய்துகொண்டிருந்தபோது ரேடாரிலிருந்து காணாமல் போனது.

விமானத்தைக் கண்டுபிடிக்க மீட்பு ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது.

பிறகு டின்டாவிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மலைச்சரிவில் விமானம் மோதி வெடித்து சிதறி உள்ளது. அங்கு விமானம் எரிந்துகொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தக் காட்டுப்பகுதியிலிருந்து புகை வெளியேறும் காணொலிகளை ரஷ்ய அதிகாரிகள் வெளியிட்டனர்.

சம்பவ இடத்துக்கு மீட்புப்படை அனுப்பப்பட்டிருப்பதாக அமுர் வட்டாரக் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி சொன்னார்.

இப்போதைக்கு 25 மீட்புப்பணியாளர்களும் 5 உபகரணங்களும் அனுப்பப்பட்டுள்ளன. 4 விமானங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வான்வழியாகவும் தேடல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

விபத்தைப் பற்றி அன்காரா ஏர்லைன்ஸ் கருத்துத் தெரிவிக்கவில்லை.

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset