
செய்திகள் உலகம்
கடல் வழி சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்த மூன்று மலேசியர்கள் கைது செய்யப்பட்டனர்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரின் கடல் எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக நுழைந்த மூன்று மலேசியர்களைக் கடலோரக் காவல்படை கைதுசெய்துள்ளது.
நேற்று பிற்பகல் 2.05 மணிக்கு அடையாளம் தெரியாத படகு ஒன்றை கடலோரக் காவல்படை அதிகாரிகள் கண்டதாகச் சிங்கப்பூர்க் காவல்துறை தெரிவித்தது.
சிங்கப்பூரின் வடமேற்கு கரையோரம் உள்ள புலாவ் சரிம்பான் (Pulau Sarimbun) தீவு அருகே அதிகாரிகள் சோதனை நடத்திக்கொண்டிருந்தனர்.
கடலில் இருந்த படகை நோக்கி அதிகாரிகள் சென்றபோது அது மலேசியாவை நோக்கி வேகமாகச் சென்றது.
அதிகாரிகள் படகைப் பின் தொடர்ந்தனர்.
அதிகாரிகள் விரட்டியபோது படகில் இருந்த இருவர் நீரில் விழுந்து படகில் மீண்டும் ஏறி அமர்ந்தனர்.
படகு இருமுறை கடலோரக் காவல்படைப்படகின் மீது மோதியது.கடலோரக் காவல்படை அதிகாரி ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
கைதுசெய்யப்பட்ட மூவரும் 28 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.படகு பறிமுதல் செய்யப்பட்டது. காவல்துறை விசாரணை தொடர்கிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2025, 10:41 am
இந்திய இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது: பாகிஸ்தான் அரசு தகவல்
April 29, 2025, 3:54 pm
இருக்கையில் iPad சிக்கிக்கொண்டதால் திருப்பிவிடப்பட்ட விமானம்
April 29, 2025, 3:30 pm
உக்ரைனுடன் போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு
April 28, 2025, 10:19 am
பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை சீற்றம்: அபாய எச்சரிக்கையை பிறப்பிக்கப்பட்டது
April 28, 2025, 9:00 am
எதிர்பார்த்ததைவிட 5 மடங்கு அதிகம் விலைபோன Titanic கடிதம்
April 27, 2025, 10:33 pm
ஆஸ்திரேலிய பிரதமருக்கு எதிராக தேர்தலில் தோமி தோமஸின் மகள் போட்டி
April 27, 2025, 12:23 am
ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் கட்டிடங்கள் இடிந்தன: 406 பேர் படுகாயம்
April 26, 2025, 11:51 am
ஜப்பானில் ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேசத் தடை
April 25, 2025, 5:43 pm