
செய்திகள் உலகம்
கடல் வழி சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்த மூன்று மலேசியர்கள் கைது செய்யப்பட்டனர்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரின் கடல் எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக நுழைந்த மூன்று மலேசியர்களைக் கடலோரக் காவல்படை கைதுசெய்துள்ளது.
நேற்று பிற்பகல் 2.05 மணிக்கு அடையாளம் தெரியாத படகு ஒன்றை கடலோரக் காவல்படை அதிகாரிகள் கண்டதாகச் சிங்கப்பூர்க் காவல்துறை தெரிவித்தது.
சிங்கப்பூரின் வடமேற்கு கரையோரம் உள்ள புலாவ் சரிம்பான் (Pulau Sarimbun) தீவு அருகே அதிகாரிகள் சோதனை நடத்திக்கொண்டிருந்தனர்.
கடலில் இருந்த படகை நோக்கி அதிகாரிகள் சென்றபோது அது மலேசியாவை நோக்கி வேகமாகச் சென்றது.
அதிகாரிகள் படகைப் பின் தொடர்ந்தனர்.
அதிகாரிகள் விரட்டியபோது படகில் இருந்த இருவர் நீரில் விழுந்து படகில் மீண்டும் ஏறி அமர்ந்தனர்.
படகு இருமுறை கடலோரக் காவல்படைப்படகின் மீது மோதியது.கடலோரக் காவல்படை அதிகாரி ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
கைதுசெய்யப்பட்ட மூவரும் 28 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.படகு பறிமுதல் செய்யப்பட்டது. காவல்துறை விசாரணை தொடர்கிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 5:14 pm
துபாயில் உள்ள 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 6 மணி நேரம் போராடி மக்கள் மீட்பு
June 15, 2025, 4:49 pm
அமெரிக்க ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் கணவரும் கொலை
June 15, 2025, 4:23 pm
ஈரான், அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ரத்து: ஓமான் வெளியுறவு அமைச்சர் தகவல்
June 15, 2025, 10:33 am
பாலியில் துப்பாக்கிச் சூடு: ஆஸ்திரேலியர் ஒருவர் மரணம், ஒருவர் காயம்
June 15, 2025, 8:31 am
நாட்டு மக்களுக்கு நேற்றிரவு ஈரானியத் தலைவர் அலி கமெய்னி ஆற்றிய உரை
June 14, 2025, 1:31 pm
‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் பங்காளித்துவ நாடாக வியட்னாம் இணைகிறது
June 14, 2025, 10:21 am
அமெரிக்காவில் ஓடுபாதையிலிருந்து விலகி புல்தரையில் சென்ற விமானம்
June 13, 2025, 8:48 pm
இஸ்ரேல் தாக்குதலின் எதிரொலியாக ஐக்கிய அரபு அமீரக விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன
June 13, 2025, 4:14 pm