
செய்திகள் மலேசியா
சிலாங்கூர் மாநில அரசின் வேலை வாய்ப்பு சந்தை; வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும்: அமிரூடின் ஷாரி
செலயாங்:
சிலாங்கூர் மாநில அரசின் வேலை வாய்ப்பு சந்தை மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும்.
சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.
இந்த வேலை வாய்ப்பு சந்தை இன்று கோம்பாக் மாவட்டத்தில் நடைபெற்றது.
இதில் மொத்தம் 4,318 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்பட்டன. குறிப்பாக 13,000 ரிங்கிட் வரையிலான சம்பளத்துடனான வேலை வாய்ப்புகள் இங்கு தரப்பட்டது.
மேலும் 3,074 காலி பணியிடங்களுக்கு குறைந்தபட்ச சம்பளமான மாதத்திற்கு 2,000 ரிங்கிட்டிற்கு மேல் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தில் உற்பத்தி, தங்குமிடம் சேவை, உணவு, பானம் உட்பட பல துறைகளைச் சேர்ந்த சுமார் 26 நிறுவனங்கள் இணைந்துள்ளன.
உண்மையில் இங்கு 6,000 ரிங்கிட் முதல் 13,000 ரிங்கிட் வரை அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.
உதாரணமாக கார்சம் நிறுவனம் 13,000 ரிங்கிட் சம்பளம் வழங்குகிறது.
இதன் பொருள், அவர்கள் சாதாரண வேலையை மட்டுமல்ல, நிர்வாக வேலை அல்லது வேலை தேடுபவர்களுக்கு தகுதி வாய்ந்த சலுகைகளையும் வழங்குகிறார்கள்.
ஆகவே இந்த வேலை வாய்ப்புகளை வேலை தேடுபவர்கள் குறிப்பாக இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
செலயாங்கில் நடைபெற்ற வேலை வாய்ப்பு சந்தையை தொடக்கி வைத்த டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2025, 6:20 pm
கெஅடிலான் கட்சி பிரிவு கொள்கைகளை நிராகரிப்பதுடன் மடானி கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறது: டத்தோஸ்ரீ ரமணன்
October 22, 2025, 5:48 pm
கூலிமில் நடந்த பட்டாசு வெடிப்பு விபத்துக்கு சட்டவிரோத வானவேடிக்கைகளே காரணம்: உள்துறை அமைச்சு
October 22, 2025, 5:18 pm
போக்குவரத்து சம்மன்கள்: அரசு இறுதியாக 70% வரை தள்ளுபடியை வழங்குகிறது
October 22, 2025, 4:30 pm
ஆசியான் உச்சி நிலை மாநாடு; டிரம்ப் வரும் ஞாயிற்றுக்கிழமை மலேசியா வருகிறார்: ஃபஹ்மி
October 22, 2025, 4:17 pm
மலேசிய தொழிலாளர்களுக்கு புதிய பயிற்சி தளத்தை மனிதவள அமைச்சு உருவாக்குகிறது: ஸ்டீவன் சிம்
October 22, 2025, 3:47 pm
இந்த வட்டாரத்தின் சிறந்த மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் : ஐஎல்ஓ இயக்குநர் பாராட்டு
October 22, 2025, 2:50 pm