
செய்திகள் மலேசியா
Fu Wa, Feng Yi ஆகிய இரு பாண்டா கரடிகள் அடுத்த மாதம் சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படும்
புத்ராஜெயா:
தேசிய மிருகக்காட்சிசாலையில் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள Fu Wa, Feng Yi ஆகிய இரு பாண்டா கரடிகள் அடுத்த மாதம் சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படும் என்று இயற்கை வளச் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புதிய ஒப்பந்தத்தின்படி, இந்த ஆண்டு தொடங்கி 2035-ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகளுக்கு ஒரு புதிய ஜோடி பாண்டா கரடிகள் மீண்டும் அங்கிருந்து கொண்டு வரப்படும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 16-ஆம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங் மலேசியாவிற்கு மேற்கொண்ட மூன்று நாள்கள் அரசு முறை பயணத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
ள Fu Wa, Feng Yi ஆகிய இரு பாண்டா கரடிகளும் ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் தேசிய மிருகக்காட்சிசாலையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பாண்டா கரடிகள் ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதிசெய்யவும், சர்வதேச அனுமதித் தேவைகளுக்கு இணங்கவும், மலேசியாவிலிருந்து சீனாவிற்குப் பயணம் செய்வதைப் பற்றி அறிந்துகொள்ள க்ரேட் பயிற்சியை மேற்கொள்ளவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேசிய மிருகக்காட்சிசாலையில் பார்வையாளர்கள் Fu Wa, Feng Yi வை தூரத்திலிருந்து பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 7:12 pm
சபா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது: பிரதமர்
September 15, 2025, 7:11 pm
இந்திய சமுதாயத்தின் நலன் காக்கும் ஒரே கட்சியான மஇகாவை யாராலும் அழிக்க முடியாது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 15, 2025, 7:08 pm
மலேசியர்கள் எனும் உணர்வோடு நீடித்து வாழ்வோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் மலேசிய தின வாழ்த்து
September 15, 2025, 4:37 pm
கொலம்போங்கில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மரணம்
September 15, 2025, 4:36 pm
அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் குறித்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ஃபஹ்மி
September 15, 2025, 4:34 pm
1.5 மில்லியன் ஊழல் பணத்தை தாபோங் ஹாஜி, ஏஎஸ்பியில் வைத்திருந்த குடிநுழைவுத் துறை அதிகாரி
September 15, 2025, 3:11 pm
7 பேர் கொண்ட குடும்பம் நிலச்சரிவில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது
September 15, 2025, 3:09 pm
தேசியக் கூட்டணியின் 11ஆவது பிரதமர் வேட்பாளர் அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்: டான்ஸ்ரீ மொஹைதின்
September 15, 2025, 3:08 pm