நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வளர்ந்த நாடாக மாற மலேசியாவுக்குப் புதிய அணுகுமுறை, முன்னேற்றம் தேவை: பிரதமர் அன்வார்

பெட்டாலிங் ஜெயா:

வளர்ந்த நாடாக மாற மலேசியாவுக்குப் புதிய அணுகுமுறை, முன்னேற்றம் தேவை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இன்றைய சூழலில், வளர்ந்த தேச அந்தஸ்தை அடைவது வழக்கமான மாற்றத்தின்  மூலம் அடைய முடியாது என்று அவர் குறிப்பிட்டார். 

எந்தவொரு விரைவான மாற்றமும் தவிர்க்க முடியாமல் அரசியல் அல்லது சமூக பதற்றம் போன்ற பிரச்சனைகளைக் கொண்டு வரும்.

ஆனால் நமக்கு ஒரு தேர்வு இருக்கிறதா என்று நாம் நம்மை நாமே கேட்டுக்கொண்டால், பதில் இல்லை. 

வேறு வழியில்லை என்றால், நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

ஒரு படைப்பாற்றல் மிக்க தேசத்தைத் தூண்டுவதற்கு லாபத்தையும் பொறுப்பையும் சமநிலைப்படுத்துவது மிக அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset