செய்திகள் மலேசியா
பிறை இல்லாத தேசியக் கொடியை வெளியிடப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்க்கப்பட்டது: ரசாருடின் ஹுசேன்
பெட்டாலிங் ஜெயா:
சின் சியூ டெய்லி செய்தித்தாளில் பிறை இல்லாத தேசியக் கொடியையை வெளியிடப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்க்கப்பட்டது என்று அரச மலேசியக் காவல்துறை தலைவர் தான்ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.
விசாரணை நிறைவடைந்த நிலையில் மேல் நடவடிக்கைகாக நேற்று விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்க்கப்பட்டது என்று அவர் கூறினார்.
இதுவரை, மொத்தம் 54 நபர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் மற்ற சாட்சிகளையும் அழைக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பதிப்பின் முதல் பக்கத்தில் பிறை இல்லாமல் தேசிய கொடியை அச்சிட்டு வெளியிட்டதற்காக சின் சியூ டெய்லி முன்பு மன்னிப்பு கேட்டது.
விசாரணை நடைபெற்று வரும் நிலையில், செய்தித்தாளின் தலைமை ஆசிரியர் மற்றும் துணை தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்படுவதற்கு முன்பு மூன்று மணி நேரம் போலீசில் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
January 1, 2026, 2:25 pm
ஐயப்ப வழிபாடு குடும்பங்களில் நன்னெறியையும் பக்தியையும் வளர்க்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
January 1, 2026, 2:16 pm
மஇகாவின் அரசியல் எதிர்காலத்தை மத்திய செயலவையே தீர்மானிக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 1, 2026, 12:30 pm
இஸ்லாத்தை நிர்வாகத்தின் மையமாக மீட்டெடுக்க பாஸ் விரும்புகிறது: டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி
January 1, 2026, 12:07 pm
இன்று முதல், RM5 மில்லியன் வரை வருவாய் உள்ள வணிகங்கள் மின்னணு விலைப்பட்டியலை செயல்படுத்த வேண்டும்
January 1, 2026, 10:57 am
பத்துமலை 140 அடி முருகன் சிலையின் 20ஆம் ஆண்டு பூர்த்தி விழாவுடன் பன்னீர் அபிஷேகம்: விமரிசையாக நடைபெற்றது
January 1, 2026, 1:37 am
மலேசியாவை ஒரு நாகரிக நாடாக மாற்றும் உறுதியுடன் மக்கள் ஒன்றுபட வேண்டும்: பிரதமர்
January 1, 2026, 1:36 am
