
செய்திகள் மலேசியா
சீனாவுடனான பரஸ்பர விசா விலக்குகள் கல்வி, சுற்றுலா துறைகளை மேம்படுத்தும்: விஸ்மா புத்ரா
பெட்டாலிங் ஜெயா:
மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பரஸ்பர விசா விலக்கு ஒப்பந்தங்கள் கல்வி, சுற்றுலா, விளையாட்டுத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் விதமாக இருப்பதாக வெளியுறவு அமைச்சகம், விஸ்மா புத்ரா தெரிவித்தது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகையுடன் இணைந்து சீனாவுடனான இந்த ஒப்பந்தங்கள், மக்களிடையேயான உறவுகளுக்கு முன்னுரிமை அளித்து, பரஸ்பர பயணம் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை அதிகப்படுத்துவதாக விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மலேசியாவும் சீனாவும் 31 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
இதில் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகளுக்கு பரஸ்பர விசா விலக்கு அளிக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.
மலேசியர்கள் இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை விசா இல்லாமல் சீனாவுக்கு பயணம் செய்யலாம்.
அதே நேரத்தில் சீன நாட்டினர் அடுத்த ஆண்டு டிசம்பர் 31 வரை மலேசியாவிற்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அரசத் தந்திர உறவுகளின் 50-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த விலக்கு அளிக்கப்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 12:18 pm
பிரதமரின் தாய்லாந்து பயணம் இரு நாடுகளுக்கிடையே புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது
April 19, 2025, 11:47 am
மின்னியல் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி: அயூப் கான்
April 19, 2025, 11:46 am
வளர்ந்த நாடாக மாற மலேசியாவுக்குப் புதிய அணுகுமுறை, முன்னேற்றம் தேவை: பிரதமர் அன்வார்
April 19, 2025, 10:37 am
நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெருநடை வீரர் சரவணனுக்கு பிரதமர் நிதியுதவி
April 18, 2025, 6:32 pm