
செய்திகள் மலேசியா
போலிசாரைத் தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஆடவர் மாரடைப்பால் மரணமடைந்தார்
கப்பாளா பாத்தாஸ்:
போலிசாரைத் தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஆடவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
பினாங்கு மாநில போலிஸ் தலைவர் டத்தோ முகமது அல்வி ஜைனல் அபிடின் இதனை தெரிவித்தார்.
இந்தோனேசிய ஆடவர் ஒருவர் நேற்று மாலை தாமான் புக்கிட் ஜம்புலில் ஒரு போலிஸ் அதிகாரியை தாக்கி ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்.
சம்பந்தப்பட்ட ஆடவர் சுங்கை நிபோங் காவல் நிலையத்தில் அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு காவல் நிலையத்தில் இருந்தபோது சந்தேக நபர் திடீரென மயக்கமடைந்து, ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அவர் மருத்துவமனை வந்தவுடன் இறந்துவிட்டார்.
அவரது மரணம் மாரடைப்பால் ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 4, 2025, 4:50 pm
கொலை வழக்கில் மகனின் உடலை புதைத்த சந்தேக நபருக்கு ரொம்பினில் உள்ள அமைதியான இடம் தெரியும்: போலிஸ்
August 4, 2025, 4:38 pm
புதிய கூட்டுறவு சட்ட மசோதா டிசம்பரில் தாக்கல் செய்யப்படும்: இவோன் பெனடிக்
August 4, 2025, 12:30 pm
குடியுரிமை விதியின் மாற்றங்கள் 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் நடைமுறைக்கு வரும்: டத்தோஶ்ரீ சைபுடின்
August 4, 2025, 12:27 pm
சிறப்பு வாகனப் பதிவு எண்களுக்கு இனி ஒப்புதல் இல்லை: டத்தோ ஹஸ்பி
August 4, 2025, 12:25 pm